- Kill your routine with routine. – நானே
வழக்கம் போல scattered, unorganised thoughts…
Read More
- ஆலன் டூரிங் – உன்னதங்களைக் கனவு கண்டவன்
கணினிகளே முழுமையாக உருவாக்கப்படாத காலத்தில், நவீன கணினிகளைக் கனவு கண்டு கட்டமைத்தவன், இரண்டாம் உலகப் போரை சில ஆண்டுகள் முன்பாக முடித்து வைத்தவன். யார் இந்த ஆலன் டூரிங்? ஏன் நவீன கணினியியலின் காலத்தில் அவன் முக்கியமானவன்?
Read More
- Factfulness – #MyReadsMyNotes
காரில் உள்ள GPS சரியான இடத்தைக் காட்டாமல் சொதப்பினால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துவோமா? ஓடாத கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும் என்ற கருத்துகள் காலாவதியாகிவிட்டன. அப்படி இருக்க மனிதன் மட்டும் எப்படி ஒரு கருத்தை தவறாக புரிந்துகொண்டு அப்படியே வாழ்ந்துகொண்டிருக்க முடியும்? மனிதனின் இந்த தவறான புரிதலைக் களைத்தெறிய உதவக்கூடிய ஆய்வு மாதிரியை, ஆய்வுக்கருவிகளை நான் முன்வைக்கிறேன் என்ற நோக்கத்தோடு அவருடைய உரைகளின் தொடர்ச்சியாக Hans Rosling அவருடைய மகன் Ola Rosling மற்றும் மருமகள் Anna Rosling ஆகியோருடன் இணைந்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
Read More
- #ThePeopleVsTech – #MyReadsMyNotes
My notes from the book “The People Vs Tech: How the Internet is Killing Democracy (and how We Save It)” by @JamieJBartlett
Read More
- #HitRefresh – மைக்ரோசாஃப்ட்டின் கதையும் கூட..!
«««< HEAD
=======
Read More
- தகுதித் தேர்வுகளும் பித்தலாட்டங்களும்
* இது முழுக்க முழுக்க Random,Scattered thoughts… கொஞ்சம் பெரிய பதிவு…
Read More
- “அடுத்து எந்த நாட்டின் மீது படை எடுக்கலாம்?” – மைக்கேல் மூர்
விகடன் தளத்தில் வெளியான கட்டுரையின் சுருக்க வடிவம்
Read More
- தென்னாப்பிரிக்காவில் காந்தி
இந்தியர்களைப் பொறுத்தவரை தாங்கள் விரும்பும்/மதிக்கும் மனிதர்களை, புனிதர்களாக உயர்த்தி அவர்களைச் சுற்றி ஒரு புனித பிம்பத்தைக் கட்டியமைத்துவிட்டு, உண்மையை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ திரைபோட்டு மறைத்துவிடுவார்கள். உண்மை யாருக்கும் வேண்டியதில்லை. அதனால் பைசா உபயோகமும் கிடையாது. ஆனால், கட்டி எழுப்பப்பட்ட புகழ் மயக்கங்களோ இனிமையைத் தரும். காந்தி, நேதாஜி, நேரு, அம்பேத்கர், பெரியார் என்று அத்தனைத் தலைவர்களையும் சுற்றியும் நம்மூரில் எத்தனை மாயக்கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஒரே ஒரு நிமிடம் மேலே கூறியவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தாலும் இத்தகைய பாதிப் போலியான புகழுரைகள்தான் உடனே நினைவுக்கு வருகின்றன. ஒரு தலைவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவதில் இத்தகைய கேலிக்கூத்துகள் அதிகமாகவே நடக்கும். அவர்களாகவே எழுதிய சுயசரிதைகளும் சில விடுபடல்களோடேயே இருக்கும். முதன்மைச் சீடர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறுகளோ மிகையான புகழுரைகளாக இருக்கும். சில குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் எழுதும் வாழ்க்கை வரலாறுகளோ முதன்மைச் சீடர்களின் புகழுரைகளுடன், அவர்களது இடைச்செருகல்களும் அதிகமாக இருக்கும். உண்மையான வாழ்க்கை வரலாறுகள் அரிதானவையே.
Read More
- சாதியை ஒழிக்கும் வழி ~ அம்பேத்கர் – புத்தக அறிமுகம்
“…அரசியல் கொடுமையை விடச் சமூகக் கொடுமை பயங்கரமானது. எனவே சமூகத்தை எதிர்த்து நிற்கும் சீர்திருத்தவாதி, அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதியை விட தீரம் மிகுந்தவன்…
~ அம்பேத்கர்”
- சோளகர் தொட்டி
சமீப காலத்தில் அதிக கனத்தோடு கையில் சுமந்து படிந்த புத்தகம் இந்த சோளகர் தொட்டி. கையிலிருந்த கனம் மனதில் ஏறி படிக்கமுடியாமல் இடையில் நிறுத்தி நிறுத்தி படித்த புத்தகம்.
Read More
- LE GRAND VOYAGE – உறவின் பெரும் பயணம்
உறவுகளுக்கும், பயணங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, இரண்டிலும் துணையைப் பொறுத்தே அது சிறப்பாய் அமைவதோ, சீரழிந்து போவதோ இருக்கும். அப்படி, சரியாக அமையாத தந்தை-மகன் உறவும், அவர்களின் நீண்ட பயணமும் தான் LE GRAND VOYAGE திரைப்படத்தின் கதை. சில பயண அனுபவங்கள் தரும் படிப்பினைகள் வாழ்நாள் முழுதும் வருபவை, சிறு வயதில் நண்பன் அடித்த கல்லின் வடு நீங்காமல் உடலில் எங்கோ இருந்துகொண்டு அந்த நண்பனை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதைப் போல. அவர்களின் மொழியை அறியாத, அந்தப் பிரதேசங்களை கண்டிராத, அந்தக் கலாச்சாரத்தை வாழ்ந்திராத, அந்த உணர்வுகளை புரிந்திராத, அந்த உறவைப் பெற்றிராத எனக்கும் அந்த உணர்வை தந்த சிறந்த படைப்பு இந்தப் படம்.
Read More
- அகோரா – மதத்தின் மகத்துவம்
“இதயமற்ற உலகில் இதயமாக ஆன்மாவற்ற உலகில் ஆன்மாவாக ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாக மக்களுக்கு அபினாக….“ –காரல் மார்க்ஸ்
” இந்தக் கடவுளை போட்டு உடைக்கிறேனே, வசைபாடுகிறேனே எதிர்த்து ஒன்றுமே சொல்வதில்லையே ஏன்? கேட்கும் திறனையும், பேசும் திறனையும் உணர்ச்சியையும் இழந்துவிட்டாரோ? “ இதெல்லாம் பொய்யும் புரட்டும் உடல் முழுதும் கொண்ட நச்சு நாத்திகர்களுடைய பேச்சு போலவே இருக்கிறதில்லையா? அவர்களுடைய வேலையே இதுதானே. இந்த திராவிட இயக்கப் புல்லுருவிகள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் உடன் சேர்ந்து விநாயகர் சிலைகளை உடைத்தபோதோ, ஒருவனுக்கு ஒருத்தி என்பதைப் போதித்த ராமபிரானின் படங்களைச் செருப்பால் அடித்தபோதோ உதிர்த்த வெற்றுச் சவடால்களாக இருக்கும்.
Read More
- பெரியார் – கலகக் குரல்
Read More
“பெரியார் என்ன சாதித்தார்?” “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” இப்படிப் பல கேள்விகள் பெரியாரை நோக்கி, அவரைப் பற்றி அ’ன்னா ஆ’வன்னா மட்டுமே தெரிந்து கொண்டவர்களால் எழுப்பப்படுகிறது. இப்படியெல்லாம் கேள்வி கேட்கும் பல அரைகுறைகளில் ஒருவனல்ல நான். அந்தக் கிழவனின் சாதனையை அனுபவிக்கும் பல கோடிப்போரில் நானும் ஒருவன். பெரியார் சாதித்ததை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.
- தந்தை பெரியார் பிறந்தநாள்
கடந்து போன நேற்றைப் போலவே, இன்றும் ஒரு நாளே. நாளை, இந்த நாளும் கடந்து போயிருக்கும். ஆனால், சில நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் ஆழமான ஒரு அழுத்தத்தைப் பதிவு செய்து போயிருக்கும். அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதைப் போன்றதொரு நாள் இந்நாள். தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.
- தனித் தமிழ் பெயர் வைத்தது தவறா?
ஆயிரம் குப்புசாமிகளும், ராமசாமிகளும் தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பெயராக சூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நரேஷ், சுரேஷ், அஸ்வின் என்று பிறமொழிப் பெயர்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது, இது இன்று நேற்றைய பழக்கம் இல்லை, பாரி, ஓரி, ஆய், அண்டிரன் என்ற சங்கப் பெயர்களெல்லாம் மங்கிப் போய் ராஜராஜ சோழன்களும், விஜயாலய சோழன்களும் தோன்றிய சங்கம் மருவிய காலத்திலிருந்து நீண்டு வரும் பழக்கம். அப்போதே தமிழனின் பெயருடன் வடமொழிக் கலப்பு கூடி குடும்பம் நடத்தத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்தே தமிழ்ப் பெயர்கள் தற்காலிகமாய் போடப்பட்ட வெளிச்ச விளக்குகளால் மங்கிப் போயிருந்தன.
Read More
- பாலஸ்தீனக் கவிதைகள்
எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ அங்கெல்லாம், பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும் – பிரடெரிக் எங்கெல்ஸ்
ஈழம், பாலஸ்தீனம், திபெத், காஷ்மீர் என்று உலக வரைபடத்தில் ஒவ்வொரு பிரதேசங்களும் மற்ற வல்லரசு/வல்லரசாக ஆகத் துடித்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளாலும், இனவெறி/ஆதிக்க அரசுகளாலும் வதை பட்டுக் கொண்டிருக்கும் பல தேசிய இனங்கள் ரத்தமும் கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கின்றன. ஒரு இனத்தவன் கல்லெறிகிறான், இன்னொருவன் மதத்தின் தலைமையின் கீழ் செல்ல, மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடுகிறான், அதே மூன்று சரணங்களுக்கு கச்சாமி பாடிக் கொண்டு அடக்குமுறையை காட்டுபவனிடம் தன்னாலியன்ற அத்தனை எதிர்ப்புகளையும் முள் வேலி முகாம்களுக்குள்ளிருந்து செய்கிறான். இன்னொரு இனமோ கண்ணுக்கு கண்ணையும் பல்லுக்கு பல்லையும் பிடுங்கிப்பார்த்தது, மக்களை ஒன்று கூட்டி ஓலமிட்டுப் பார்த்தது, கற்களை வீசிப்பார்த்தது. நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள மனம் வந்தவர்களுக்கு ஆதிக்கத்தை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. இன்னமும் மக்களைத் துடிப்புடன் வைத்திருக்க அம்மண்ணின் கவிஞர்கள் உதவியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அம்மண்ணின் கவிஞர்களின் முக்கிய கவிதைகளை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள். இன்று நேற்றல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு. என்னை விட அதிக வயது கண்ட புத்தகம் இது. மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள் புத்தகம் படித்த போது மஹ்மூத் தார்விஷ் பற்றி இணையத்தில் தேடினேன். அப்போது பலஸ்தீனக் கவிதைகள் என்ற இந்நூல் மின்நூலாகக் கிடைத்தது.
மஹ்மூத் தார்விஷ், பௌசி அல் அஸ்மர், ரஷீத் ஹூசைன், சலீம் ஜிப்றான், தௌபிக் சையத், அந்தொய்னா ஜபாறா, பத்வா துகான், சமீஹ் அல் காசிம், மூயின் பசைசோ ஆகிய ஒன்பது பாலஸ்தீனக் கவிகளின் கவிதைகள் இந்நூலில் தொகுத்திருக்கிறார்கள்.
மஹ்மூத் தார்வீஷின் கவிதைகளிலிருக்கும் எதிர்ப்பும் தீர்க்கமான வார்த்தைப் பயண்பாடுகளும் ஏற்கனவே அறிந்தவை தான் என்றாலும். தன் மீதும் தன் இனத்தின் மீதும் அடக்குமுறைக்கெதிராக இவருடைய பசியெடுத்த வாய்கள் கவிதைகளைப் பாடிச் செல்கின்றன. என் கண்களும், உதடுகளும், என்னுடைய தன்னுணர்வும் இருக்கும் வரை எதிரிக்கு எதிராக நின்று, விடுதலைக்கான போரை நான் பிரகடனம் செய்வேன், என்னும் இவருடைய கவிதைகள், அடக்கு முறைக்கெதிராக மட்டுமே காற்றில் கரைந்து செல்கிறது, கேட்கும் உள்ளங்களில் விடுதலைக் கான குமுறலை கொதித்தெழச் செய்யும் விடுதலைக் கீதங்கள் இவருடையவை. இத்தொகுப்பிலிருக்கும் நம்பிக்கை என்னும் இவருடைய கவிதை பாலஸ்தீன மண்ணுக்கு மட்டுமல்ல, போராடும் ஒவ்வொரு மண்ணுக்கும் தற்காலிகத் தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் இருக்கச் செய்யும் உற்சாகப் பாணத்திற்கு ஒப்பானது.உனது பாத்திரத்தில் – இன்னும்
சிறிது தேன்
எஞ்சி உள்ளது.
ஈயைத் துரத்து
தேனைப் பேணுஎன்கிறார் மஹ்மூத் தார்ஷ்வி. தேன் என்றும் கெட்டுவிடாது, ஆனால் ஈக்களுக்கு இறையாக்காமல் பின் வரும் சந்ததிக்கு பத்திரப்படுத்தச் சொல்லும் அளவுக்கு நம்பிக்கையை விதைத்துச் செல்கிறார். இவர் இறந்த பின்னும், பாலஸ்தீனத்தில் குண்டடி பட்டு இடிந்து வீழ்ந்துவிடாத வீட்டின் ஒவ்வொரு பாத்திரத்திலும் ஈக்கு இறையாக்காமல் தேன் மிச்சம் உள்ளதுதான். ஈக்கள் ஏவுகணை ஏறி வந்தபோதும், தேன் மிச்சம் இருக்கிறது.
எனது நண்பனைப் பற்றி
எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர்.
எப்படி அவன் சென்றான்…
துப்பாக்கி வேட்டுக்கள்
அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின
தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம்.
நான் அவனது காயங்களைப் பார்த்தேன்
அதன் பரிமாணங்களைப் பார்த்தேன்
நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன்
குழந்தையை இடுப்பில் ஏந்திய
ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன்
அன்புள்ள நண்பனே!
அவன் எப்போது வருவான் என்று கேட்காதே
மக்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்
என்று மட்டும் கேள்.“நான் போராடத் துணிந்தவன், ஏனெனில் நான் அரேபியன்” என்று சொல்லும் பௌசி அல் அஸ்மாரின் கவிதைகளோ இன்னொரு வகையானவை. நான் என் ஆன்மாவை அடகு வைக்காத அராபியன் அதனால் தடுப்புக் காவலில் இருக்கிறேன் என்கிறார். அவருடைய நகரங்களிலும், வயல் வெளிகளிளும் வீசிச் சென்ற சுதந்திரக் காற்றை சுவாசித்தவர், அந்த சுதந்திரக் காற்றை மீண்டும் சுவாசிக்க தன் கவிதைகளை கூர் தீட்டியிருக்கிறார்.
சாத்தியமற்றதை
என்னிடம் கேளாதே
என் நண்பனே
என்னை என் நாட்டை
விட்டு போகுமாறு
உன்னால் கேட்க முடியாதுறஷீத் ஹூசைன், பாலஸ்தீனிய அரபுக் கவிதைகளில் அரசியலை புகுத்திய முன்னோடிகளில் முதலாமவர். அம்மக்களின் துயர நிலையைப் பாடும் இவர் கவிதைகள் தங்களுக்குள்ளிருக்கும் துரோகிகளையும் அதே நேரத்தில் சுட்டத்தவறுவதில்லை. இவருடைய கவிதைகள் கால, தேச வேறுபாடுகளைக் கடந்து ஒடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு இன மக்களையும் குறிப்பிட்டு பாடுகிறது.
இருண்ட கூடாரங்களில்
சங்கிலிகளில்
எனது மக்களை சிறையிட்டுள்ளனர்.
வாய் மூடி இரும் என ஆணையிட்டுள்ளனர்
அவர்களேதும் முறையிட்டால்
இராணுவச் சவுக்கால்
மரணத்தால்
பசியால்
அச்சுறுத்துகின்றனர்.
—————————————————————-
எங்கள் மத்தியில்,
இன்னும் ஒரு கும்பல்
எஞ்சியுள்ளது.
அவமானத்தை
அது சாப்பிடுகின்றது.
தலைகுனிந்து நடந்து செல்கின்றது.
அவர்களின் பிடரியை நிமிர்த்துவோம் நாங்கள்
எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும்
நக்கும் ஒருவனை
எப்படி நாங்கள் எம்மிடை வைக்கலாம்.சலீம் ஜிப்ரானுடய கவிதைகள் தன்ன்னை அடிக்க வருபவனை நோக்கி ஒரு கணம் ஒரேயொரு கணம் உன் முதுகைத் திரும்பிப் பார் என்று சொல்வதைப் போல் அமைந்திருக்கின்றன.
ஓ!
நாசி முகாம்களில் இறந்தோரின் ஆன்மாக்களே,
தூக்கில் தொங்கும் இம்மனிதன்
பெர்லினில் பிறந்த ஓர் யூதன் அல்ல
தொங்கும் இம்மனிதன்
என் போல் ஓர் அராபியன்.
உங்கள் சகோதரர்கள்
அவனைக் கொன்றனர்
சியோனில் வாழும்………..
உங்கள் நாசி நண்பர்கள்.எங்கள் நம்பிக்கையை, எங்கள் போராட்டத்தை உன்னால் ஒன்றும் செய்துவிட முடியாது, எங்கள் தலைமுறைகள் போராடிக் கொண்டேயிருக்கும் நீ அடக்கும் வரை, எங்கள் பசி தீவிரமாகும் போது உன் பற்களுக்கிடையேயிருந்து கூட எங்களுக்கான உணவை நாங்கள் சேகரிப்போம், உன் மார்பின் மீது நாங்கள் ஒரு பெருங்சுவரைப் போல நீண்டு நிற்போம் என்னும் தௌபீக் சையதுவின் கவிதைகள் என்றென்றைக்கும் போராட்டத்தைத் உயிர்ப்போடு வைத்திருப்பவை.
ஊசித் துவாரத்துள் யானையைச் செலுத்தலாம்
பால்வீதியில் பொரித்தமீன் பிடிக்கலாம்
முதலையைக் கூட மனிதனாய் ஆக்கலாம்
இவையெல்லாம் உமக்கெளிது.
ஆயினும்
சுடர்விடும் எமது நம்பிக்கை ஒளியினை
துன்புறுத்தி அழிக்கவோ
எமது பயணத்தின் ஓர் அடியினைக் கூட
தடுத்துவிடுவதோ
உமக்கு சாத்தியமற்றது.
இங்கு நாங்கள் இரத்தம் சிந்துவோம்
இங்கு எமக்கோர் பழைமை இருந்தது
எதிர்காலம் ஒன்றும்
இங்கெமக்குள்ளது
வெல்ல முடியாதவர் இங்கு நாங்களே…
ஆகவே
எனது வேர்களே!
ஆழச் செல்க, ஆழச் செல்க!எத்தனை நம்பிக்கையை இவருடைய கவிதைகள் விதைத்துப் போகிறது. மூவாயிரம் மைல்கள் தொலைவிலிருப்பவர்களுக்கு நம்பிக்கையை விதைக்குமானால் களத்திருந்தவர்களுக்கு எத்தனை உற்சாகத்தைத் தந்திருக்கும்.
அடக்குமுறைக்கெதிராக கொதித்தெழும் ஒவ்வொரு மனித மனமும் பறந்து சென்று இந்தப் பாலஸ்தீனக் கவிகளோடு சேர்ந்துகொள்ளவேச் செய்யும், அத்தனை வீரியமான வார்த்தைகளை இட்டு நிரப்பிய வெடிகுண்டுகளைப் போன்ற கவிதைகளைச் சமைக்கும் இவர்களது வார்த்தைகள் அடிமை விலங்குகளை அரித்தெடுக்கும் அமிலங்களாக பொங்கிக் கொண்டேயிருக்கின்றன.
நீங்கள் எங்களுக்கு காயங்களைத் தந்த போதும், எங்கள் எலும்புகளை நொறுக்கிய போதும், நாங்கள் உங்களுக்கு எங்கள் நாட்டின் ரோஜாப்பூக்களையும் எங்கள் இசையை உங்களுக்கு இசைத்து காட்டவும் வந்துள்ளோம். ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்டபோதும் பொறுமை காத்த நாங்களே உயர்ந்தவர்கள், அந்த பூக்களும், இசையும் எங்களுக்கு சொந்தமானவையே, நாங்கள் காதலுடனும் அன்புடனும் பேசுவது இதுவே இறுதி முறை, என்று தங்கள் போராட்டம் அடுத்த கட்டமாக ஆயுதத்தை நோக்கித் திரும்பப்போவதை ஒரு போர் பிரகடணமாகவே ஒரு கவிஞர் போர்பறையை அறைகிறார். அவர், அந்தோய்னா ஜபாறா.
இந்தியப் பெண்களை மதமும் அதன் மாயக்கரங்களும், சமையலறைக்குள் கட்டிபோட்டுவிட்டன, மதத்தின் மாயக்கரங்களைப் பின்னிருந்து இயக்கிக் கொண்டிருப்பவை ஆணின் அடிமனத்திலிருக்கும் அகோரப்பசி என்றால் மிகையாகாது, அங்கே, போராட்டம், பெண்ணின் புர்க்காக்குள்ளிலிருந்து வார்த்தைகளை வெளியே கொட்ட வைக்கிறது. இந்த வார்த்தைகள் இருபது ராணுவ வீரர்களுக்குச் சமமானது என்று எதிரியே பயந்தும், வியந்தும் பேசுகிற அளவுக்கு வீரியமான வார்த்தைகளை பத்வா துகானின் கவிதைகள் வீசிச் செல்கிறது. அவருடைய மூன்று கவிதைகள் இந்நூலில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.
சிதைவுகளிலிருந்து
சித்திரவதையிலிருந்து
ரத்தம் உறைந்த சுவர்களிலிருந்து
வாழ்வினுடைய
மரணத்தினுடைய
நடுக்கங்களிலிருந்து
புதிய வாழ்க்கை ஒன்று கிளர்ந்தெழவேச் செய்யும்
நம்பிக்கையை தன் மக்களுக்கு விதைத்துச் செல்லும் போதே, தங்களின் வலிமையைச் சொல்லி அந்த வலிமையை எதிரிக்கும் உணர்த்துகிறார்.
அராபிய வேர்கள் இறப்பதே இல்லை
அவை பாறைகளைத் துளைத்து
ஆழமாய்ச் செல்பவை
ஆழ நிலத்திலே
தம் வழியினை கண்டறிபவை
அவை
போராடுபவனை மனிதனாகவும், ஒடுக்குபவனை மனிதகுலத்தின் எதிரியாகவும் சித்தரித்து புதிய விடியல்களை படைக்க அழைக்கும் கவிதைகளைப் பாடிச் செல்கிறார் சமீஹ் அல் காசிம்.
வாழ்க்கையின் சிறப்பு –என்
சிறையிலேயே பிறக்கிறதென்று
நான் நம்புகிறேன் அம்மா
என்னை இறுதியில் சந்திக்க வருவது
ஒரு குருட்டு வௌவாலாய்
இருக்காதென்று நான் நம்புகிறேன் அம்மா.
அது பகலாய்த்தான் இருக்கும்
அது பகலாய்த்தான் இருக்கும்
என்று சிறையிலிருந்து தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார், அவருடைய சிறப்பான கவிதைகள் பலவும் சிறையிலேயே எழுதப்பட்டவை.
தன் இனத்தின் ரத்தம் ஆறாய்ப் பெருகி ஓடும் போது மௌனம் காத்த இந்த உலகையே ஒட்டுமொத்தமாய் சபிக்கும் ஒரு அராபிய கவிஞனின் வார்த்தைகள் உண்மையில் இதயமுள்ளோரை வாட்டவேச் செய்யும்.
நாங்கள் முள் கம்பியின் மீது
கிடக்கும் வரைக்கும்
இந்த உலகின்
தலையணையின் கீழ்
“டைனமைட்” ஒன்றை நாம் பொருத்தி வைப்போம்
என்று சபிக்கும் நேரத்திலே, உண்மையான மனித மனத்தை, அதன் இயல்பையும் சுட்டிக்காட்டி மனிதனாக மாறுங்கள் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
உலகின் ஆண்களே,
உலகின் பெண்களெ,
இப்போது நீங்களெம்முடன் இருங்கள்
மனிதனுக்குரிய கௌரவம் என்பதை
நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம்
மனிதன் என்ற பெயரின் மதிப்பை
நாங்கள் உமக்கு பெற்றுத் தருவோம்
இப்படி ஒட்டுமொத்த மனித இனத்தையும் அதன் மௌனத்தையும் குலைத்துப் போடும் இந்த குரலுக்குச் சொந்தக்காரர் மூயின் பசைசோ
உண்மையில் ஒரு தேசம், மத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயராலோ, வேறு எந்த பெயரால், அமைப்பால் அடக்கப்பட்டு கிடந்தாலோ, அடிமை விலங்கை இன்னும் தரித்துக் கொண்டிருந்தாலும், இந்த உலகின் எழுநூறு கோடி மனிதனுள் ஒருவனாவது அடிமை விலங்கை சுமந்து கொண்டு சுதந்திரக் காற்றுக்காய் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கவும் நாம் விட்டால், நம்மை நாம் மனிதன் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பொருள் இருந்து விட முடியும்? “பரந்து கெடுக உலகியற்றியான்” என்றான் வள்ளுவன், பரந்து கெடுக இவ்வுலகு என்பது பொருத்தமாய் இருக்கும், ஒரு மனிதன் அடிமை விலங்கோடு இருக்கும் போது.
எனது பேப்பரும், பேனாவும், எனது வீட்டின் இடிந்த சுவரின் கல்லும் என்னை “எதிர்த்து நில்” என்று சொல்கிறது என்கிறார் மூயின் பசைசோ. எத்தனை எளிமையான வார்த்தை எதிர்த்து நில், என்பது ஆனால், வீரியமான வார்த்தை. இந்த வார்த்தைக்குள் தான் அடக்குமுறைக்கெதிராய் நிற்கும் ஒவ்வொரு இயக்கத்தையும், ஒவ்வொரு தனி மனிதனையும் சுவாசிக்கச் செய்து கொண்டிருப்பது, அடக்குமுறையிலிருந்து மீண்ட ஒவ்வொரு தேசத்தையும் அடிமை விலங்கை உடைத்தெறியச் செய்தது. </div>
- மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள்
கவிதை வானத்தை மூடி மறைக்க முயலும்
ரேடார்களையும் ஏவுகணைகளையும் மீறி
உலகெங்கும் சொல் தொடர்ந்து பறக்கும்
எந்த ஒரு விமான தளத்திலும் அது வந்து
இறங்குவதை தடை செய்ய முடியாது, தடுக்க முடியாது
ஏனெனில் சொல் என்பது ஒரு பறவை
நுழைவுச் சீட்டுத் தேவையில்லை அதற்கு
~ நபில் ஜனாபி
(ஈராக்கைச் சேர்ந்த கவிஞர். மேலே உள்ள கவிதையை குர்திஸ்தான் சுதந்திர தினத்தன்று அவ்விழாவில் பாடியதற்காகவும், அவ்விழாவில் கலந்து கொண்டதற்காகவும் தன் நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர்.)அணுகுண்டோ ஒரு முறைதான் வெடிக்கும்; புத்தகங்களோ திறக்கும் போதெல்லாம் வெடிக்கும் தன்மையுடையது. என்பது யாரோ எப்போதோ சொன்னது. எல்லா புத்தகங்களும் இப்படி திறக்கும் போதெல்லாம் வெடிப்பவையல்ல, சில புத்தகங்கள் அப்படிப்பட்டவை. அப்படி திறக்கும் போதெல்லாம் வெடிக்கக்கூடிய புத்தகங்களிலொன்று என் கைகளில் இப்போது இருக்கிறது. அது, மண்ணும் சொல்லும் – மூன்றாம் உலகக் கவிதைகள். எஸ்.வி.ராஜதுரையும், வ.கீதாவும் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்த பல கவிதைகள் அடங்கிய புத்தகம்.
மூன்றாம் உலகக் கவிதைகள் என்றதுமே, இந்நூல் எத்தகைய கவிதைகளைக் கொண்டது என்பது புரிந்திருக்கும். இக்கவிதைகள், அடக்குமுறைக்கெதிரான கவிதைகளையும், அடிமைத்தனத்தின் கீழான நிலையையும், அதை எதிர்க்கும் வல்லமையையும், சமூக நீதிக்கான போராட்டங்களையும் உரக்க எதிரொலிக்கும் எதிர்ப்பின் கவிதைகள்.
எதிர்ப்பைப் பற்றிய கவிதைகள் எதிர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேலானதாக இருக்க வேண்டும். என்ற மஹ்மூத் தார்விஷின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்நூலின் கவிதைகள் அமைந்திருக்கின்றன. அத்தகைய கவிதைகள் மட்டுமே தொகுக்கப்பட்டிருக்கின்றன. போராளிகள், புரட்சியாளர்கள், சிறைக் கைதிகள், கவிஞர்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்டவர்களுடைய கவிதைகள். ஆகத் தெரிந்த சே குவேரா முதல் பெயர் தெரியாத அடக்குமுறைக்கு எதிராக தன் சொற்களை உதித்த சிறைக்கைதிகள் வரை எல்லோருடைய எதிர்ப்பின் சொற்களும் கவிதைகளாக இந்நூல் முழுதும் கொட்டிக் கிடக்கிறது.
கவிதையின் சிறப்பு அதன் இலக்கணத்தையும், அமைப்பையும் விட அதன் பொருளில் தான் இருக்கிறது, அதன் தீவிரத்தில் தான் இருக்கிறது (என்னுடையவை அப்படிப்பட்டவையல்ல, அவை கவிதைகளே அல்ல) என்ற என்னுடைய கருத்தாக்கத்துக்கு நெருங்கி வரும் கவிதைகள் பலவும் சொற்களாய், அம்மண்ணையும், அம்மண்ணின் வரலாற்றையும் சொல்கிறது.
இடஒதுக்கீடுக்கெதிராய் குறுக்குக் கயிறு போட்டு குறுக்கே நின்ற பார்ப்பனர்களையும், அந்தப் பார்ப்பனீயத்தில் திளைத்தவர்களையும் எதிர்த்த ஒரு போராளியின் கவிதையும் இந்நூலில் இருக்கிறது. (அக்கவிதையை எழுதியவர் வரவர ராவ்)அம்மா,
என் முடியை வளர விடு,
அதை வெட்டாதே
கிளைகள்
வெட்டப்பட்ட மரம்
பாடும் பறவைகளுக்கு உகந்தது அல்லஎன்று ஆஃப்காணிஸ்தானின் பழங்குடிகளிடம் பாடப்பட்டுவரும், பெண்ணியக் கவிதையும் இந்நூலில் இருக்கிறது.
ஏலாரான் – துட்டகமுனு சண்டை!
துட்டகமுனுவுக்கு வெற்றிக்கு மேல் வெற்றி
ஒரு யானையின் முதுகில் ஏலாரனின் பிணம்
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
அந்தக் கைத்தட்டலை நிறுத்து
கைத்தட்டுதல் நாசமாய் போக!
அந்த பெயருக்கு
ஒரே… ஒரு … கண்ணீர் துளியை
வழங்கப் போவது யார்?
அன்று இறந்தவன் நம்மில் ஒருவன்…!இக்கவிதைக்குச் சொந்தக்காரர், சிங்களரான பராக்ரமு கொடித்துவக்கு.
புர்க்காக்களுக்குள்ளிலிருந்து பெண்ணியக் குரலெழுப்பாமல், அந்தப் புர்க்காக்களைக் கிழித்தெறிந்துவிட்டு குரலெழுப்பும் இஸ்லாமிய பெண்கவிகளின் கவிதைகளும் இருக்கிறது.
இஸ்லாமிய கட்டுப்பெட்டித்தன ஆனாதிக்க அடாவடிக் கோட்பாடுகளைக் கொண்ட அத்தனை புனித நூல்களையும் கேள்விக்குள்ளாகும் சயீதா கஸ்தர் என்னும் பாக்கிஸ்தானிய பெண்ணியப் போராளியின் கவிதையும் இருக்கிறது.
கிஷ்வர் நஹீத், என்னும் இன்னொரு பாக்கிஸ்தானிய பெண் கவியின் குரலோ முந்தையதுக்கு மாறானது ஆனால், தீர்க்கமானது.ஒரு ஆடுகுதிரையின் மீது
ஒரு குழந்தை ஆடுகிறது
அது மரக் குதிரை
குழந்தையின் ஸ்பரிசம் அறியாதது
குழந்தை குதிரையை அடிக்கிறான்
தனது திறமையைக் கண்டு
தன்னையே மெச்சிக் கொள்கிறான்
அவன் வளர்ந்து பெரியவனாகிறான்
மரக்குதிரையில் மீண்டும் சவாரி செய்கிறான்
ஒரு சடங்கின் மூலம்
தன் இளமையை அறிவிக்கிறான்.
இரவு கழிந்ததும்
குதிரை உரு மாறுகிறது
குதிரையை அடிப்பவன்
தன்னைத் தானே மெச்சிக்கொள்கிறவன்
மாறாமலேயே இருக்கிறான்:
எஜமானனாக
சவாரி செய்பவனாக
கணவனாகஅரபு நாடுகளுக்கிடையே, நல்லுறவை நாடும் கவிதைகள், நாஜிக்களின் முகாம்களிலிருந்து சவப்பெட்டியினுள் பினத்தோடு தப்பித்த ஒரு யூதனின் கவிதை, அந்த நாஜிக்கூடங்களிலிருந்து தப்பித்து, மதத்தின் பெயரால், மதத்தின் புனிதப் பெயரால் வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட “பசி கொண்ட பாலஸ்தீனியக் கவி“யின் கவிதை ஒன்று,
நான் பசியால் துடிக்கும் போது
எனது மண்னை அபகரித்தவர்களின் சதையை
விழுங்குபவன் நான்
அச்சம் கொள்
எனது பசியைக் கண்டு.நிற வெறிக்கெதிராய் போராடிய கறுப்பு பேனாக்கள் கவி வடிக்கின்றன.
வெள்ளை நிறமோ விசேட நாட்களுக்குரியது
கறுப்பு நிறமோ ஒவ்வொரு நாளுக்கும்
சொற்கள் ஏ.கே 47களாக வேண்டும்
சொற்கள் எப்போதும் போரட வேண்டும்நடு இரவில் திரும்பி பார்க்காமல் விட்டுப்போன, புத்தனின் மனைவி யசோதராவைக் கேட்கும் பெண் கவிகளும், மரியத்தையும், பாத்திமாவையும் கேள்வி கேட்கும் பெண் கவிகள், முந்தைய சகோதர தேசமும், இன்றைய எதிரி தேசங்களுமான அண்டை நாடுகளைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒன்றைப் போலவே கேட்கிறார்கள் கேள்விகளாய், ஆணாதிக்கவாதிகளை. அது புத்தனாக இருந்தாலும் சரி நபியாக இருந்தாலும் சரி…
இன்றைய இந்துத்துவ சோதனைக் களத்தின் மைந்தன் ஒருவனுடைய “ஆர்யகுமாரனனின் பிரேதப் பரிசோதனைக்” கவிதை பாடிச் செல்கிறது இப்படி,அவனது
தோலை உரித்த போது
தங்கத் தகடு ஒன்றும் கிடைக்க வில்லை…
அவனது
பெரும் தொப்பையிலிருந்து
நவமணிகளை எதுவும் எடுக்கவில்லை…
(வாழ்நாள் முழுதும் அவன் இவற்றை உண்டதாகச் சொல்லப்பட்ட போதும்)
அவனது
நஞ்சேறிய இதயத்தில்
புணிதச் செயல்கள் ஈட்டிய அமுதத்தைக் காண முடியவில்லை…
ஓர் ஓநாயின் அழகான இதயமே
சூலம் போன்ற கோரைப் பற்கள்
அழகிய கண்களில் முதலைக் கண்ணீர்
ஆசார நாளங்களில் உறைந்து போன சாரயம்
ஆம்
இதுதான்
பாடம் போட்டு வைக்கப்பட்ட
ஓர் ஆரிய குமாரனனின் பிரேத பரிசோதனை அறிக்கை
(நீரவ் பட்டேலுடைய கவிதையின் சுருக்க வடிவம்)இப்படி நூல் முழுக்க, மஹ்மூத் தார்விஷின் வரிகளின் படியமைந்த கவிதைகளே, அந்த மண்ணையும், மக்களையும் சொற்களாய் விவரிக்கின்றன…
இந்நூலின் ஒரு குறையாக நான் காண்பது, கவிதைகளுக்கெண் கொடுத்து பட்டியலிடாமலும், பொருளடக்கம் இல்லாமல் இருப்பதும் தான்.
நூல் : மண்ணும் சொல்லும் மூன்றாம் உலக கவிதைகள்
வகை : கவிதைத் தொகுப்பு
தமிழாக்கம் : எஸ்.வி.ராஜதுரை & வ.கீதா
விலை : ரூ.115
பதிப்பகம் : அடையாளம்</div>
- வரலாறு மாற்றுப்பாதையிலேயே திரும்பும்…
தனநந்தன், நந்த வம்சத்தின் கடைசி அரசன். இவனைக் கலகம் செய்து தோற்கடித்தே சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக்கு வந்து, மௌரியர்கள் சாம்ராஜ்யத்தை அமைத்தான்.Read More
பெயருக்கேற்றார் போல, ஏராளமான செல்வத்தைத் தானே குவித்து வைத்திருந்தான், அன்றைய அம்பானிபோல பெரிய மாளிகையில் வாசம், ஏராளமான பொன், பொருள் என்று வரலாறு இவனைப் பற்றி பதிவு செய்து வைத்திருக்கிறது. பிராமணர்களுக்கு தாணமளிப்பது இல்லை, யாகம், வேள்வி எதுவுமில்லை. இதனாலேயே கூட இவனிடம் இத்தனை செல்வம் சேர்ந்து இருக்கலாம் என்பது என் கணிப்பு. கூடவே, நந்த வம்சத்தவர்களுடைய பரம்பரையில் ஒரு சந்தேகம் இருக்கிறது, அவர்கள் சத்திரியர்கள் அல்ல என்பதுதான் அது. கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள். தாழ்ந்த குலம் எனப் பலவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
இவ்விரு காரணங்களாலும், அன்றைய பார்ப்பனர்கள் நந்த வம்ச அரசர்களது மீது ஆரம்பத்திலிருந்தே பொருமிக் கொண்டிருந்தார்கள். யாகம், வேள்வி இல்லாததால் வருமாணம் இல்லை. கீழ்ச்சாதியைச் சேர்ந்த பயல்கள் அரசாள்வதா? எல்லாவற்றுக்கும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இத்தனைச் செல்வத்தை ஒருவனே குவித்து வைத்திருக்கும்படி ஒருவன் வந்ததும் மக்களிடமும் வெறுப்பு தோன்றியது.
சாணக்கியன் / கௌடில்யன் / விஷ்ணுகுப்தன் என்ற பெயரில் ஒரு பார்ப்பணன், சந்திர குப்த மௌரியன் என்ற ஒரு வீரண் இருவரும் கைகோர்த்தார்கள்.
அலெக்சாண்டர், சிந்து நதிக்கரையின் ஓரமாய் வந்து காத்திருந்த நேரம், இந்தியப் பகுதிகளை விழுங்க. சாணக்கியனும், சந்திர குப்த மௌரியனும், நந்தர்களை வீழ்த்த அவனிடம் உதவி கேட்டு ஓடினார்கள். துரத்தியணுப்பிவிட்டான். அலெக்சாண்டர் மீது வெறுப்போடு கிளம்பினார்கள் இருவரும். தனநந்தனை கவிழ்த்தார்கள். மௌரிய சாம்ராஜ்யம் துவங்கியது. (அலெக்சாண்டர் இறந்தபிறகு, அலெக்சாண்டரது படைகளோடு போரிட்டு அவர் கைப்பற்றிய பல பகுதிகளையும் தன்னுடைய பேரரசோடு இணைத்துக் கொண்டான் சந்திரகுப்த மௌரியன்.)
இங்கே, கவணிக்க வேண்டிய இன்னொரு தகவல். சந்திர குப்த மௌரியனுக்கும் ஒரு கதை இருக்கிறது, அவனும் சத்திரியன் இல்லை. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவனே. அவனுடைய வம்சவழியின் முன்னோர்கள் மீதும் பல கதைகள், தாழ்ந்தகுலத்தைச் சேர்ந்த தாய். மலைக்குடி வம்சம் என பல கட்டுக்கதைகள். எது உண்மையாய் இருந்த போதும், வருணாசிரம தர்மம் கெட்டது.
தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொண்டு நந்தர்களை வீழ்த்த ஏன் சாணக்கியன் முன்வந்தான். மீண்டும் சந்தேகங்கள் சாணக்கியன் என ஒருவன் இருந்தானா? அவனே எழுதியதாகச் சொல்லப்படும் அர்த்தசாஸ்திரத்தில் பல அமைச்சர்களுடைய பெயரைக் குறிப்பிட்ட போதும், தலைமை அமைச்சரான அவன் பெயரை ஏன் விட்டான்? மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சாணக்கியனின் பெயர் எங்கேயும் குறிப்பிடப் படவில்லையே ஏன்? இப்படி சாணக்கியனின் இருப்பின் மீதே சந்தேகங்கள். (அன்றைய நாளில் படைப்பின் கர்த்தா, தன் பெயரை குறிப்பிடாதது மரபாக இருந்தது. மெகஸ்தனிஸின் குறிப்புகளில் சிலவே கிடைத்திருக்கிறது. போன்ற காரனங்கள் சொல்லப்பட்டாலும், சாணக்கியனின் இருப்பின் மீதான சந்தேகம் இருந்து கொண்டேயிருக்கிறது.)
நந்தர்களை எந்த காரணத்துக்காக பிராமணர்கள் எதிர்த்தார்களோ, அதே காரணத்துக்காக தன்னையும் எதிர்ப்பார்கள், இன்னுமொரு கலகத்தை விளைவித்து தன்னையும் தூக்கியெறிவார்கள், என்ற பயம் இருந்தது. சுற்றி மெய்க்காப்பாளர்கள், அத்தனை பேரும் பெண்கள். நாடு முழுக்க அத்தனை ஒற்றர்கள், பகலில் காக்கைகளைப் போலவும், இரவில் ஆந்தையைப் போலவும் ஒற்றர்கள் தங்கள் வேலையைச் செய்தார்கள். இரவிலும் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தூங்கியிருந்திருப்பான் சந்திரகுப்த மௌரியன்.
அவன் நினைத்தற்கேற்றபடி பிராமணர்கள் மௌரியர்கள் மீதும் அதே பொருமலோடு இருந்தார்கள். இடையில் சந்திரகுப்தன் சமணனாக மாறி தக்காணத்துக்கு சமணத்துறவி பத்ரபாகுவோடு வந்துவிட்டதாகவும் வரலாறு சொல்கிறது. அசோகர் பௌத்தத்துக்கு மாறியதும் எல்லோரும் அறிந்ததே. பிற்கால மௌரியர்களும் அடிக்கடி சமணத்துக்கும், பௌத்தத்துக்கும் மாறி மாறி விளையாடிக்கொண்டேயிருந்தார்கள். மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார்கள், பிராமணர்கள்.
பிரஹதத்தன் என்னுமொரு பலமில்லாத ஒருவன் மௌரிய குலத்தில் வந்திருந்தான், அரசனாகவும் இருந்தான். புஷ்யமித்ரசுங்கன் என்னும் படைத்தளபதி பிரஹதத்தனை வெட்டிக் கொண்றான். மௌரிய வம்சம், கீழ்க்குலத்தோர் வம்சம் முடிந்தது. வர்ணாசிரமம் மீண்டும் உயிர்விட்டது. மௌரியர்கள் முடிந்தார்கள், சுங்கர்கள் வந்தார்கள். பௌத்தம் கீழ்நிலைக்கு வந்தது, வைதீக ஆட்சி மீண்டும் வந்தது.
வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையிலோ அல்லது பிற்போக்கான பாதையிலோ, முந்தையதிலிருந்து முற்றிலும் மாறுபட்டே திரும்பி நிற்கும்.
புஷ்யமித்ர சுங்கன் தோற்றுவித்த சுங்க வம்சத்தின் கடைசி அரசன், தேவபூபதி, அவனுடைய பிராமன அமைச்சர், வாசுதேவ கண்வர். அவனைக் கொண்று வாசுதேவ கண்வர், கண்வர் வம்ச அரசைத் தோற்றுவித்தார்.
வரலாற்றின் (திரும்பும்) பாதையை பிராமணர்களே அன்றிலிருந்து தீர்மாணித்து வந்திருக்கிறார்கள்.
ஆதாரங்கள்: </p>- an advanced history of india- RC Majumdar, HC Raychaudhri, Kaikinkar Datta
- இந்திய வரலாறு – டாக்டர் ந.சுப்ரமண்யன்
- இந்திய வரலாறு பாகம் 1 – பேராசிரியர். கோ.தங்கவேலு
- சோமநாதபுரம் கதை & வரலாறு – ரூமிலா தாப்பர்
மார்ச் மாதம் 1999ஆம் ஆண்டு, மும்பை பல்கலைக் கழகத்தில் இந்தியாவில் நாணயவியல் துறையை வளர்த்தெடுத்தவரும், கணித துறை பேராசிரியரும், மார்க்சிய நோக்கில் வரலாற்றை ஆய்வு செய்து, புத்தகங்களை படைத்தவருமான டி.டி.கோசாம்பியின் (தாமோதர் தர்மானந்த் கோசாம்பி) நினைவுப் பேருரையாற்ற வரலாற்றாசிரியர் ரூமிலா தாப்பர் வந்திருந்தார், அவர் ஆற்றிய உரை ஒரு வகையில் சிறப்பு மிக்கது, இதுவரையிலும் வரலாறு என்ற பெயரில் சொல்லப்பட்டு வரும் கதையின் பின்புலத்தை அலசி ஆராய்ந்து அவர் ஆற்றிய உரை, தற்போது (மே 2010ல்) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வந்திருக்கிறது.
“பதினேழு முறை தோற்றவன், இறுதியாக வென்றான்,” “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி” என்றெல்லாம் வியாக்கியானம் பேச எல்லாராலும் மேற்கோள் காட்டப்படும் முகமது கஜினியின் வரலாறே திரிக்கப்பட்டுத் தான் இப்படி வியாக்கியானம் பேசத் தகுதியான கதையாக உருமாறியிருக்கிறது. இப்படிச் சொல்லப்படும் கதையெல்லாம், வரலாறு தெரியாதவர்களால் ஊதிவிடப்பட்டதென்று ஒதுக்கிவிடலாம். ஆனால், நீங்கள் சொல்லும் வரலாறு ஊதி பெரிதாக்கப்பட்டது தானென்று ஒரு குரல் கேட்கும் போது அதைக் கூர்ந்து கவணிப்பது அவசியமானது தானே?
சோமநாதர் கோயில் கஜினியின் முகமதுவால் இடிக்கப்பட்டது என்பதிலிருந்து நேரெதிராக இரு சக்திகளை முன்னிறுத்தும் வகைப்பட்ட வரலாறு இந்தியாவில் துவங்குகிறது. இந்து–முஸ்லீம் வெறுப்புணர்வின் அடிநாதத்தைத் தேடிக் கொண்டே போனால், அது கோயில்களை இடித்து தங்கள் மத வழிபாட்டு நிலையங்களை மேம்படுத்தினார்கள், மதத்தை அழித்தார்கள், என்ற குற்றச்சாட்டிலேயே போய் நிற்கும். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நேற்றைய நீதி மன்ற தீர்ப்பு வரை நீளும் பிரச்சினைதான் இது. நீரோடைக்கு அடியில் இருக்கும் பிரச்னை இது, பல குட்டைகளையும் போட்டு குழப்பியதில் தெளிவாக பார்க்க முடியாமல், மேலே குழம்பியை ஒரு சகதியை மட்டும் நாம் பார்த்துக் கொண்டு, காசுமீர் பிரச்னையா, அதோ அந்தாண்டை இருந்து பாகிஸ்தான் காரன் கல்லு குடுக்குறான்யா என டீக்கடைகளில் பெஞ்சை தேய்த்துவிட்டு டீயை காலி செய்துவிட்டு போய்விடுகிறொம். பிரச்னையின் ஆணிவேர் துவங்கிய சோமநாதர் கோயில் இடிப்பின் வரலாறும் கதையும் இந்நூலில் (உரையில்) சொல்லிச் செல்கிறார் ரூமில தாப்பர்.
இந்நூலைத் துவங்கும் போது, கோவில் கொள்ளயடிக்கப்பட்டதற்கு முன்பு அங்கு நிலவிய சூழல், அன்றய சமூக அமைப்பு , போன்ற பலவற்றையும் சுட்டிக்காட்டி, இந்த ஆய்வை முன்னெடுக்க தான் எடுத்துக்கொள்ளும் சாட்சியங்களையும், சொல்லி அப்படியே, அந்தச் சான்றுகளில் உள்ளவற்றையும், அச்சான்றுகளின் நம்பகத்தன்மையையும், விளக்கிக் கொண்டே சென்று உச்சநிலையாக, மேற்கண்ட சான்றுகளிலிருந்து எவ்வாறு மதச்சார்பற்றத் தன்மை உடைக்கப்பட்டது என்பதையும், மத வெறுப்புணர்வு வளர்க்கப்பட்டதையும் கூறுகிறார்.
அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் ஐந்து வகையான சான்றுகள்,- துருக்கிய–பாரசீகச் சான்றுகள்
- முகமது காலத்திய சமணச் சான்றுகள்
- சோமநாதபுரத்திலுள்ள் சமஸ்கிருதக் கல்வெட்டுகள்
- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடந்த விவாதங்கள்
- தேசிய வாதிகளின் பார்வைகள்
இந்த ஐந்து வகைச் சான்றுகளில் இருந்து, ஒவ்வொன்றையும், விளக்கி, கஜினியின் முகம்மது சோமநாதர் ஆலய கொள்ளை மற்றும் சிலை உடைப்பால் மட்டுமே இஸ்லாத்தின் வெற்றியாளராக கருதப்படவில்லை என்பதையும், அன்றைய நாளிலிருந்து இன்று வரைத் தொடரும் ஷியா–சன்னி உள்ளடிச் சண்டைகளில் முகம்மதுவின் நிலைப்பாட்டாலும், அன்றைய குதிரை வணிகத்துக்கும் உள்ள தொடர்பினாலும் ஆதிக்கப் போட்டியுமே முகம்மதுவை இஸ்லாத்தின் வெற்றியாளராக நிலைத்திருக்கச் செய்யும் காரணங்களென்றும் விளக்குகிறார்.
சோமநாதபுரக் கோயில் முகம்மதுவால் மட்டுமல்ல, அன்றைய உள்நாட்டு அரசர்களாலும், கொள்ளையர்களாலும் தாக்கப்பட்டதற்கான சான்றுகளின் குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகிறார். சோமநாதபுரக் கோயில் வெறும் கோயிலாக மட்டுமில்லாமல், அன்றைய அதிகார குவிப்பிடமாகவும், மையமாகவும் விளங்கியதால்தான் அன்றைய நாளில் உள்நாட்டவர் பலராலும் தாக்கப்பட்டதாகவும் இவர் சொல்கிற கருத்தை ஏற்காமல் இருக்க முடியாது. அன்றைய சைவ–சமண, சிவன்–மகாவீரர் போட்டிகளின் நிலையையும் ஒருவர் மீதான மற்றொருவரின் வெற்றிகள் கூறும் வேறொரு வகையான வரலாற்றுக்கதையையும் சமணச்சான்றுகளிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.
சோமநாதபுரத்திலுள்ள சமஸ்கிருத மொழியிலுள்ள கல்வெட்டு ஒன்று, கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் சிறுபகுதி, ஒரு மசூதி கட்டுவதற்காக தானமாக வழங்கப்பட்டதற்கான ஆவணமாக விளங்குகிறது, சமஸ்கிருதத்திலும் அரபிய மொழியிலுமாக இந்த கல்வெட்டுகள் உள்ளன, கோவில் இடிப்புச் சம்பவத்தின் இருநூறு ஆண்டுகளில் இந்நிகழ்வு நடந்துள்ளது, அன்று மதச் சகிப்புத்தன்மை அந்தளவுக்கா இருந்தது? இல்லை கஜினியின் முகம்மதுவின் கொள்ளை சம்பவம், அந்தளவுக்கு கண்டுகொள்ளப்படவில்லையா? ரூமிலாவே விடையுமளிக்கிறார். இந்தக் கொள்ளை சம்பவம் பற்றி இன்று என்ன கொள்கைகள் நிலவுகிறதோ அதற்கு நேர்மாறானவை அன்று நிலவியிருக்கிறதென்பதை, அன்றைய வரலாறு சொல்கிறது என்கிறார்.
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தின் மீதான இந்துமத வெற்றியாக, (முன்னொரு காலத்திலோ, நீங்கள் தோற்றவர்கள், என்பதைச் சொல்லாமல் சொல்வதாகவும்) ஆப்கன் படையெடுப்பின் போது, சோமநாதபுரக் கோயிலிலிருந்து பெயர்த்தெடுத்துச் செல்லப்படாததாக கருதப்பட்ட கதவை, முகம்மதுவின் கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்து வருவது, அன்றைய கம்பெனியாரின் நோக்கமாக இருந்து வந்ததையும், கதவு எடுத்து வந்த பிறகுதான், அதில் துளியும் இந்தியத்தன்மை இல்லாததும், எகிப்திய தனமைகள் மிகுந்திருந்ததும், கதவு பற்றியது கட்டுக்கதையே என்றும் சொல்கிறார். இவை பிரிட்டீஷ் நாடாளுமன்ற விவாத ஆவணங்களிலிருந்து பெறப்பட்டிருக்கும் தகவல். இந்து–முஸ்லீம் துவேஷத்திற்கு தூபம் போட, மீண்டும் முகம்மதுவின் கொள்ளை கிளறப்பட்டதை தெளிவாகவே புரிந்து கொள்ளலாம்.
மீண்டும் சோமநாதர் ஆலயம் அரசு சார்பாக புதுப்பிக்கப்படுவதும், அரச பிரதிநிதிகள் அவ்விழாவில் கலந்து கொள்வது, மதச்சார்பற்ற தன்மைக்கு குந்தகத்தையும், மதத் துவேஷத்தையுமே வளர்க்கும், அது இந்து தேசிய உணர்ச்சியின் வளர்ச்சிக்கே உதவுமென்ற கருத்து கொண்டிருந்த நேருவின் கொள்கைக்கும் மற்ற இந்து தேசியவாதிகளுக்குமான முரண்பாட்டை ஐந்தாவது வகை ஆதாரமாகக் கொண்டு, மதப்பூசல்களுக்காக கிளறப்படுவதையும் விளக்குகிறார்.
ஒருநிகழ்வு, பலவேறு விதமான ஆதாரங்களையும் கட்டுக்கதைகளையும் கொண்டு விளங்குவது, உண்மையான வரலாற்றுக்கு நம்மை இட்டுச் செல்லாமல், ஒவ்வொருவரும் தான் எவ்வகையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறாரோ, அதை நோக்கிய முன் முடிவோடே செல்லும் நிலையை கொண்டு செல்லும் என்பதையும், அது என்றுமே வரலாற்றைப் படிப்பதற்கான சரியான அனுகுமுறை அல்லவென்பதையும் விளக்குகிறார்.
சோமநாதபுரக் கோவில் பற்றிய விரிவான வரலாற்று ஆய்வு நூல் ஒன்றை ரூமிலா தாப்பரே எழுதியிருக்கிறார், கிடைத்தால் அதையும் படிக்க வேண்டும்.
</div>
- The battle of algiers வரலாறு கற்றுத் தரும் பாடம்
“எங்கெல்லாம் புரட்சிகரக் குமுறல் இருக்கிறதோ, அங்கெல்லாம் பின்னணியில் சமுதாயத் தேவை இருந்தே தீரும்” – பிரடெரிக் எங்கெல்ஸ்
விடுதலையின் கீதம் பாடப்படாத வரை, எந்த விடுதலைப் போராட்டமும் ஓய்ந்ததில்லை. இயக்கங்கள் முக்கியமில்லை, தலைவர்கள் முக்கியமில்லை, தோல்விகள் முக்கியமில்லை. இயக்கம் அழிந்த பின்னாலும், தோல்வியுற்ற பின்னாலும், தேவை இருக்கும் வரை, அடக்குமுறை இருக்கும் வரை, போராட்டங்கள் ஓய்வதில்லை. வெற்றியை நோக்கியே போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அடக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கலாம், முற்றிலும் அழிக்கப்பட்ட போராட்டங்கள் இருக்கிறதா? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் இழந்த மண்ணை ஒரு இனம் மீட்கவில்லையா? தோல்விகள் வெற்றியை நோக்கிய போராட்டங்களை ஒத்திப் போட்டிருக்கிறதேயொழிய, முடக்கி விடவில்லை. ரஷ்யாவில் 1905ல் என்ன நடந்தது? க்யூபாவில் ஜூலை 26 இயக்கம் எதைச் சொன்னது?
ஒவ்வொரு போராட்ட வடிவமும் அடக்கப்படும் போது, இன்னொரு வடிவம் பிறக்கிறது. அந்த வடிவம் தோற்றுப் போனால் இன்னுமொரு வடிவம். காலம் இயங்கிக் கொண்டேயிருக்கிறது. கற்களைக் கொண்டு வேட்டையாடிய சமுதாயம், இன்று ஏவுகனைகளைக் கொண்டு அணு ஆயுதங்களால் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அன்று மக்கள் சண்டையிட்டார்கள், இன்று அரசாங்கம் போர் செய்கிறது. அன்று தொட்டு இன்றுவரை ஆதிக்க வெறி இருந்துதான் வருகிறது, அன்றிலிருந்து எதிர்ப்பும் இருந்தே வருகிறது. எதிர்ப்பின் வடிவங்களில் மாற்றம் மட்டுமேயிருக்கிறது, எதிர்ப்பேயில்லாமல் போனதில்லை. ஆதிக்கம் இருக்கும் வரை அதை எதிர்க்கும் கலகக் குரல்களும் இருந்தே தீரும்.
இவையெல்லாம் வரலாற்றுப் புத்தகங்களை புரட்டும் போது கிடைக்கும் தகவல். அப்படியொரு வரலாற்று நினைவு கூறலை அல்ஜீரியப் போராட்டம் – The Battle Of Algiers சினிமாவும் கூறுகிறது. வரலாறு கற்றுத்தரும் அத்தனை பாடங்களையும் இந்த சினிமா பதிவு செய்துவிடவில்லை. ஆனால், அல்ஜீரியப் போராட்டத்தின் படிப்பினைகளை இந்த சினிமா படம்பிடித்திருக்கிறது.
பிரான்ஸின் ஆதிக்கத்திலிருக்கிறது அல்ஜீரியா, அடக்குமுறையிலிருந்து தேசத்தை மீட்க FLNஎன்னும் ஆயுதமேந்திய விடுதலைப் போராளிக்குழு இருக்கிறது, இக்குழு தனிநபர் பழிவாங்கலில் இருந்து தாக்குதலைத் துவங்கும் விதமாக, பிரெஞ்சு ராணுவ அதிகாரிகளைக் கொல்கிறார்கள், பதிலுக்கு ராணுவ அதிகாரியொருவன் அல்ஜீரியர்களின் குடியிருப்பில் வெடிகுண்டை வைக்கிறான், மீண்டும் பழிவாங்கல், பாதுகாப்பு பலப்படுத்தல், பெண்கள் ஆயுதங்களைத் தூக்கிவர மீண்டும் பழிவாங்கல், இந்த பழிவாங்கல் கூட ஒரு விடுதலைப் போராட்டமாகவே வடிவம் பெற, மீண்டும் பலத்த பாதுகாப்பு, பிரெஞ்சுப் பெண்களைப்போல தங்களை அலங்கரித்துக்கொண்டு பிரெஞ்சு மக்கள் புழங்குமிடங்களில் வெடிகுண்டு வைக்கிறார்கள், நிலைமை தலை விரித்தாட, ஒரு கொடக்கண்டன் ராணுவ தளபதியாக வருகிறான், அவனுடைய திட்டமிடல் துவங்குகிறது, மக்களை அமைதியான முறையில் ஒரு வாரம் வேலைநிறுத்தத்திலீடுபட FLN குழு அறிவிக்க, மக்களும் சொல்பேச்சு கேட்கிறார்கள், ஆதிக்கவெறி தலைக்கேறி, வீட்டில் படுத்துக் கொண்டிருக்கும் ஆட்களையும் துப்பாக்கி முனையில் இழுத்து வந்து, ஒரு வார காலம் போராடி, வேலை நிறுத்தத்தை முறியடிக்கும் வேளையில், FLN குழுவினர் பெரும்பாலும் கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, நான்கு பேர் மட்டுமே தப்பிக்கிறார்கள், அவர்களும் படிப்படியாக ஒவ்வொருவராக மாட்டுகிறார்கள், இரண்டு வருடங்கள் காயடிக்கப்பட்ட மக்கள், திடீரென பொங்கியெழுகிறார்கள், ராணுவ ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள், அவர்களின் போராட்டம் சில ஆண்டுகள் நீடிக்க, ஆதிக்கம் அகல்கிறது, சுதந்திரம் பிறக்கிறது. (சுதந்திரமடைவது படத்தில் காட்டப்படுவதில்லை, சொல்லப்படுகிறது)
முற்றுப்புள்ளியில்லாமல், மூச்சுவிடாமல் ஒரு பத்தியிலடங்கிவிடக்கூடிய கதைதான், (மேலே சொன்னதைப் போல) ஆனால், உண்மை வரலாற்றைப் பதிவு செய்த விதத்தில், இந்த சினிமா சொல்லும் பாடம் மகத்தானது. இந்த சினிமா முழு போராட்ட வரலாற்றையும் பதிவு செய்யவில்லை, போராட்டத்தின், போரின் நிகழ்வுகளை மட்டுமெ சொல்கிறது.
ஒரு போராட்ட வடிவம் அடக்கப்படும் போது, போராட்ட வடிவங்கள் மாறுமென்பதைப் போல், அல்ஜீரிய மக்கள் முதலில் அமைதிவழிப் போராட்டங்களில் ஈடுபட, அடக்குமுறைகள் அதிகமானதால், போராட்ட வடிவம் ஆயுதந்தாங்கியதாக மாறியது, அமைப்பு அழிக்கப்பட்டதும் (படத்தில்) மீண்டும் மக்களே தங்கள் கைகளில் போராட்டங்களை எடுத்துக் கொண்டனர். கல்லெறியும் போராட்டமாகவும், ஓலமெழுப்பும் போராட்டமாகவும் மாறியிருக்கிறது. உலகமுழுவதும் அல்ஜீரியப் போராட்டத்துக்காகக் கலகக் குரல்கள் பலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது. அதில் ஆல்பெர்ட் காம்யூ, ழான் பால் சர்த்தாரினுடைய குரல்கள் முக்கியமானவை. (காம்யூவை அல்ஜீரிய போராளிகள் அவருடைய சில கருத்துக்களால் எதிர்த்தனர்)
இந்த சினிமா பல வகையிலும் நம் கண் முன்னே ஈழப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது. அடக்குமுறை ஏவப்படும் போது, ஆண், பெண், சிறுவர்கள் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஏவப்படும் போது, எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லோருமே ஆயுதமேந்ததான் செய்வார்கள். அடக்குமுறை எதன் பெயரால் வந்தாலும் சரி, அது நிறத்தாலோ, மதத்தாலோ, கடவுளின் பெயராலோ, ஒடுக்கப்படுபவர்கள் கட்டாயம் எதிர்ப்பார்கள். தங்களிடம் கிடைக்கக் கூடிய அத்தனை ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு வருவார்கள், அது கல்லாகவும் இருக்கலாம், கழுதை சாணியாகவும் இருக்கலாம், அல்லது குலவையிடும் வாயாகவும் இருக்கலாம். ஓலமிட மட்டுமில்ல எதிர்ப்பைத் தெரிவிக்கவும் தங்கள் குரலைப் பயண்படுத்துவார்கள் என்பதை இப்படத்தின் இறுதியில் காணலாம்.
கருவிலிருக்கும் குழந்தையின் மீது கூட அடிமை முத்திரை குத்தப்படும் போது வாய் திறக்காத புணிதப் பசு மௌனிகள், ஒரு சிறுவன் ஆயுதமேந்தி போராடும் போது, இவங்கள பாத்தீங்களா, சின்ன சின்னப் பசங்க கையில் ஆயுதத்தைக் கொடுத்து போராடச்சொல்றாங்க, இவா எல்லாம் போராளிகளான்னு வாய்கிழிய கத்த வந்துடுவாங்க. அப்படி ஒரு காட்சியாக, வேலை நிறுத்தத்தை ஒடுக்க ராணுவம் வீடுகளுக்குள் புகுந்து ஆட்களை இழுத்து வரும்போது, ஒரு பிஞ்சுக்குழந்தை மலங்க மலங்க விழிக்கும், ஆதரவற்று நிற்கும், இன்னொரு சந்தர்ப்பத்தில், ராணுவ அதிகாரி ஒருவர், மக்களே பயப்படாதிர்கள், அந்த தீவிரவாத குழுவிடமிருந்து உங்களைக் காக்கவே பரம்பிதா உருவத்தில் நாங்கள் வந்திருக்கிறோம், புத்தம் சரணம் கச்சாமி, யுத்தம் சரணம் கச்சாமி, ரத்தம் சரணம் கச்சாமி… என்று மைக்கில் ஓலமிட்டு கொண்டிருக்க, ஒரு சிறுவன் அவர்களுக்குத் தெரியாமல், அந்த மைக்கை எடுத்துச் சென்று இயக்கத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறான், இயக்கத்தின் காய் நகர்த்தல்களில் அவனுடைய பங்கும் இருக்கிறது. படத்தின் இறுதி வரையிலும், அந்த சிறுவன் வந்து கொண்டிருப்பான்.
இயக்கம் அழிந்த பிறகும் தன்னெழுச்சியாக மக்கள் சில காலத்திற்குப் பிறகு கொதித்தெழும் போது, பிரெஞ்சு ராணுவம் தன் ஆதிக்கத்துக்கு சாவு மணியடித்துக் கொண்டு கிளம்பும். நம்பிக்கை கிளை துளிர்க்கிறது.
தான் தோற்ற போர்களிலெல்லாம், வெற்றி பெற்றதாக காட்டிக் கொள்ளும், அமெரிக்க ஹாலிவுட் சினிமாக்களுக்கு மத்தியில், மக்கள் போராட்டத்தை காட்டும் இத்தகைய சினிமாக்கள் பாராட்டப் பட வேண்டியவை.</div>
- மனித குலமும் தமிழ்த் தேசியமும்
சிறை சிலருக்கு தண்டனையாக இருக்கலாம், சிலர் அந்த தண்டனையையே பயனுள்ளதாக மாற்றுவார்கள், (மற்றவர்களுக்கும் சேர்த்து) பழ.நெடுமாறனும் அந்த வகையில் பொடாவில் அவரை உள்ளே தள்ளிய போது பல புத்தகங்களை எழுதி இச்சமூகத்துக்கு படைத்தார், அந்த புத்தகங்கள் சிறை மலர்கள் என்ற பெயரில் தொகுப்பாக வந்தன. அந்த சிறைமலர்கள் வரிசையில் மூன்றாவது புத்தகம் “மனிதகுலமும் தமிழ்த் தேசியமும்“. இந்தச் சிறை மலரில் இன்னுமொரு முக்கிய புத்தகம் “உருவாகாத இந்திய தேசியமும், உருவான இந்து பாசிசமும்“. பழநெடுமாறன் அய்யாவினுடைய புத்தகங்களில் மேலோட்டமான எந்தப் பொருளையும் காணமுடியாது, அதேபோல, அவருடைய புத்தகங்கள் தகவல் களஞ்சியங்களாகவே இருக்கும். புத்தகத் தகவல்களோடு பெட்டிச் செய்திகளாக தகவல்களைக் கொட்டித் தருவதில் அவருக்கு நிகர் அவர் தான்.Read More
மனிதகுலமும் தமிழ்த் தேசியமும் என்னும் இந்நூல் அளவில் மிகச் சிறியதாகவும், பத்து அத்தியாயங்களையும் கொண்டிருந்தாலும் எளிமையான ஒரு அறிமுக நூலாகவும் அரிச்சுவடியைப் போலவும் இருப்பது இதன் சிறப்பு. முதல் அத்தியாயம் மனித இனத்தின் தோற்றத்தையும், பல்வேறு வகைப் பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் இனப்பாகுபாடுகளையும் மிகச் சுருக்கமாக ஒரு கதைச்சொல்லியைப் போலச் சொல்லிச் செல்கிறார். அதே போல அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஏகாதிபத்திய அரசுகளின் தோற்றங்களையும், காலனியாதிக்க நாடுகளின் தோற்றத்தையும், குடியேற்ற நாடுகளின் நிலைப்பாட்டையும் விவரிக்கிறார்.
தேசிய இனங்களின் வரையறையோடு, இன உணர்ச்சியோ, மத உணர்ச்சியோ, மத ஆதிக்கமோ எந்த தேசங்களையும் ஒன்றாக பிணைக்கும் சக்தியாக இல்லாமல், சிதறுண்ட தேசங்களை பட்டியலிடும் அதே நேரத்தில், மொழி மட்டுமே தேசங்களை இணைக்கும் இணைப்புச் சக்தியாக இருப்பதையும், மதத்தைத் தாண்டியும் மொழியால் பிரிந்த தேசங்களையும், மொழியால் இணைந்த தேசங்களையும் பட்டியலிடுகிறார். இணைந்து பிரிந்த நாடுகளையும், பிரிந்து பின் ஒன்றாக இணைந்த நாடுகளையும், கூட்டமைப்புகளையும் பட்டியலிடுகிறார். பட்டியல் எனும் போதே இன்னொன்றையும் சொல்லிவிடுவதே நல்லது. இப்புத்தகத்தில் பின்னிணைப்பாக உலக நாடுகளனைத்திலும் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையை பட்டியலிடுகிறார்.
மொழிவழித்தேசியம் பற்றியும், அதன் சிறப்பைப் பற்றியும் பேசும் அதே நேரத்தில் மத வழித் தேசியத்தின் பின்னாலிருக்கும் குறுக்குச்சால் ஓட்டும் புத்தியையும், இந்தியப் பிரிவினையின் பின்னாலிருந்த, தேசியவாதிகளின் குழப்ப மனநிலையையும் பதிவு செய்கிறார். அதேபோல ஒரு பெட்டிச் செய்தியில், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தலைவர்களின் பிரபலமும், மக்கள் சக்தியும் உடைய தலைவர்கள் இன்று யாருமில்லை, இத்தனை சக்திகளும் படைத்திருந்த அன்றே அவர்களால் இந்திய தேசிய இனத்தை உருவாக்க முடியாமல் போனது, இப்போது எப்படி உருவாக்க முடியுமென்ற கேள்வியை முன்வைக்கிறார்.
என்னைப் பொறுத்தவரை, புத்தகத்தை இரு பாகமாக நான் பிரிக்கிறேன். முதல் பாகத்தில் பொதுவாக மனித குலம், தேசிய இனங்கள், ஏகாதிபத்தியம் போன்ற பொதுவான விஷயங்களை விளக்குவதாகத் துவங்கி, பின் பாகத்தில் தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தேசிய சிக்கல்களையும், தமிழ்த் தேசியத்தின் தேவையையும் விளக்குகிறார்.
தமிழ்த் தேசியம் பற்றிய மிகச் சுருக்கமான அறிமுகம் தந்தாலும், மொத்தத் தேவையை விளக்குவதற்காக எத்தனைச் செய்திகளைச் சொல்ல வேண்டுமோ அத்தனைச் செய்திகளையும் விளக்குகிறார், தமிழ்த் தேசியம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை ஏற்படுத்த அந்தச் சிறு அத்தியாயம் ஒன்றே போதும், வேறு எந்த புத்தகங்களும் தேவையில்லை. இந்தியத் தேசியமெனும் சிறைக்குள் அடைபட்டிருக்கும் பல்வேறு தேசிய இனங்களின் சிக்கல்களை மேலோட்டோமாக விவரிக்கிறார். அதேபோல அருகாமை தேசிய இனங்களுடன் தமிழ்த் தேசியத்துக்கான பிரச்னைகளையும் தருகிறார். கடைசி அத்தியாயத்தில் தமிழ்த் தேசியம் அமைய வேண்டிய தேவையையும், ஈழப் போராட்டத்தையும் தருகிறார்.
ஒட்டுமொத்தமாய், இப்புத்தகம் தேசிய இனங்கள் பற்றிய பார்வையையும், தேசிய இன கருத்தாக்கங்களின் தோற்றம் மற்றும் அதன் போக்கோடு, தமிழ்த் தேசியத்தைப் பொருத்தி விளக்குவதற்கான ஒரு வழிமுறைக்கையேடாகவும் இந்நூல் சிறந்து விளங்கும்.
- ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி
</p>Read More
ஸ்கூப் – வரலாற்றுப் பின்னணியின் பின்னணி
“அப்பாவோட புத்தகங்களுக்கு வர ராயல்டிய வச்சு இங்கிலாந்தில் குடும்பத்தை ஓட்ட முடியுமா? நான் அங்க போயிடலாமான்னு யோசிக்கிறேன்” இப்படி ஒரு பெண்மனி கேட்டிருக்கிறார், அவர் கேட்ட படி தன் தந்தையின் புத்தகங்களின் ராயல்டியை நம்பி அவர் இங்கிலாந்துக்குச் சென்றிருந்தால், இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு களங்கம் வராமல் இருந்திருக்கலாம், இந்திய வரலாறு கொஞ்சம் திசை மாறியிருக்கும்.
“பாக்கிஸ்தான் கட்டாயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் உடைந்துவிடும்” என்று அப்போதே நான் கூறினேன் என்று டாம்பீக தாத்தாச்சாரியர் ஒருவர் பெருமையடித்திருக்கிறார். அவர் கூறியது அவர் உதவியாளருக்குக் கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.
இதைப் போன்ற தகவல்களும், ஒரு பத்திரிக்கையாளன் எப்படி எப்படியெல்லாம் தன்னுடைய சோர்ஸ்களைப் பயண்படுத்திக்கொள்வான், அவர்களை எவ்வாறு காப்பாற்றுவான் என்பதையும் விளக்கும் கதைகளும் ஏராளமாய் இந்நூலில் கொட்டிக் கிடக்கிறது.
இதெல்லாம் குல்தீப் நய்யாரினுடைய ஸ்கூப் நூலில் தான்.
லொயோலாவில் படித்த காலத்தில் ஓசியில் வந்த டெக்கன் க்ரோனிக்களில் ஆங்கில ஸ்கூப் நூலின் விமர்சனம் வந்தபோது, அதை ஓரமாக ஒதுக்கித் தள்ளிவிட்டேன். இப்போதுதான் இந்நூலை தமிழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது, எடுத்த மூன்று மணிநேரத்தில் முழுதாய் படித்து விட்டேன். அந்தளவுக்கு விறுவிறுப்பான நடை, (மொழிபெயர்ப்பிலும் கூட) அதே சமயம் ஆஃப் த ரெக்கார்ட்டாக நடந்த விஷயங்களைப் படிக்க யாருக்குத்தான் கசக்கும்?
எமர்ஜென்சிக் காலத்தில், நடந்த விஷயங்களும், அந்த எமர்ஜென்சியிலும் ஒரு சோர்ஸின் மூலமாய் கிடைத்த தகவலையும் ஸ்கூப் செய்தே தீருவேன் என்று 11மணிவரை பொறுத்து அதற்குப் பிறகு அச்சுக்கு அனுப்பும் சாமர்த்தியமும், கமல்நாத்திடம் கொக்கி போட்டு தகவலை வாங்கிய சாமர்த்தியமும், எச்.ஆர்.கன்னா விசாரணைக் கமிஷன் அறிக்கையை அசோக் சென்னிடம் வாங்கி, தனக்கு கொடுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் படிக்க முடியாது என்பதால், அதை பக்கம் பக்கமாக பிரித்து தட்டச்சு செய்து விட்டு, அறிக்கையை அசோக் சென்னிடம் தந்துவிட்டு, தன்னுடைய நகல் அறிக்கையை அரசுக்குப் போட்டியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்தது என்று மனிதர் அந்தக் காலத்திலேயே செமையான ஆட்டம் போட்டிருக்கிறார்.
பாக்கிஸ்தான் அணுவிஞ்ஞானி ஏ.க்யூ கானுடனான சந்திப்பை குல்தீப் பயண்படுத்திக் கொண்டதாக நினைக்க, குல்தீப்பை பாக்கிஸ்தான் பயண்படுத்திக் கொண்டது ஒரு திருப்பு முனை, அப்போதும் குல்தீப் தோற்காமல், கானிடமிருந்து வரையறுக்கப்பட்ட எல்லையையும் தாண்டி, நோண்டி எடுத்ததில் குல்தீப்புக்கு வெற்றியே. அதேபோல, இந்திரா காந்தியின் காலத்தில் இரும்பாலை அமைக்கும் இடத்தைப் பற்றி குல்தீப் ஸ்கூப் செய்ய, அது ஒட்டு மொத்தமாய் சொதப்பிவிட, மண்ணிப்பு கேட்குமளவிற்கு குல்தீப் மண்ணைக் கவ்வ, அதற்கடுத்து, அந்த குல்தீப்பே அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டதைப் போல எழுதியிருக்கிறாரே என்று இந்திரா கூறுமளவுக்கு மீண்டும் மீண்டும் ஸ்கூப்புக்காக அலைந்திருக்கிறார். இப்புத்தகத்துக்கு ஸ்கூப் என்று பெயர் வைக்காமல் இருந்திருந்தால், என்னய்யா இந்த ஆள் இப்படி ஸ்கூப் ஸ்கூப் என்று இழுத்திருத்திருக்கிறாரே என்று சொல்லுமளவுக்கு ஒரே ஸ்கூப் மழை.
நாற்பதாண்டு பழைய செய்தியில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப் போகிறது என்ற அலட்சியத்தோடு படிக்க ஆரம்பித்தால், அந்தச் செய்தியின் பின்னணியில் நின்று அந்தச் செய்தியை முன்னால் கொண்டு வர இவர் பட்ட பாடுகளோடு படிக்கும் போது நாற்பதாண்டு செய்திகளின் பின்னாலிருக்கும் உழைப்பும் நம் கண்முன்னால் படுகிறது. நிச்சயமாய் வரலாற்றின் பின்னணியைப் பற்றிய பின்னணித் தகவல்களை அளிக்கும் அருமையான நூல் தொகுப்பு இது.
அதேபோல, ஒரு பெருங்கட்டுரையைச் சுருக்கி எழுதும் கலையில் குல்தீப் அடித்து விளையாடுகிறார். காந்தி இறந்த போது அவர் எழுதியக் கட்டுரையின் சுருக்கத்தையும், இன்னும் இரு இடங்களிலும் சில கட்டுரைகளின் சுருக்கத்தை தந்திருக்கிறார், மொத்தக் கட்டுரையின் தகவலை இரு பத்திகளில் சுருக்கும் இக்கலை, உண்மையிலேயே பெரிய விஷயம்.
இந்நூலிற்கு குல்தீப் எழுதியிருக்கும் முன்னுரையிலிருந்து சில பகுதிகளை இறுதியாகத் தருகிறேன்.
“ஆள்பவர்களையும், மக்களையும் நேரடியாக இணைக்கும் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சியும் இணையமும் இப்போது இதைச் சாத்தியமாக்கிவிட்டன. சாதாரண மக்களுக்கு அவர்கள் ஆட்சியாளர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதைச் சொல்ல ஒரு அரசியல் செய்தியாளர் தேவையில்லை. தொலைக் காட்சியைப் பார்த்தே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியும். எழுத்தின் மூலம்தான் அறிந்து கொள்ள வேண்டுமென நினைப்பவர்களும், அதற்கு ஒரு அரசியல் செய்தியாளனைத் தான் எதிர்பார்த்திருக்க வேண்டுமென்பதில்லை, இணையத்தில் நிறைந்து கிடக்கும் வலைப்பதிவுகளில் எழுதுபவர்கள் செய்தி, ஆய்வு எல்லாவற்றையும் தருகிறார்கள். சில சமயங்களில் சில பெரிய செய்திப்பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை விட இவர்கள் விஷயம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
செய்தித் தாள்களின் காலம் முடிந்துவிட்டது என்று இதற்கு அர்த்தமில்லை. போட்டி கடுமையாயிருக்கிறது அவ்வளவுதான். இறுதி வெற்றி செய்தித் தாளுக்கோ, தொலைக்காட்சிக்கோ, வானொலிக்கொ, இணையத்திற்கோ இருக்கலாம். ஆனால், யார் ஸ்கூப் செய்கிறார்களோ அவர்களுக்குத் தான் மரியாதை” என்று இவர் திறமையை மட்டுமே மதிக்கிறார், பதிவர்களிடம் எலக்கியத்திறமை இல்லை, வாசிங்டனில், சிட்னியில், அமைந்தகரையில், அயனாவரத்தில் கூட என்னுடையதைப் போல வந்ததில்லை, அதனால் என்னுடையதுதான் உசத்தி என்று பேத்தவில்லை. ஸ்கூப்புக்கு வணக்கம்.</div>
- வால்காவிலிருந்து கங்கை வரை
வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம் பற்றிய இக்கட்டுரை, செம்மொழிமாநாடு-விக்கிபீடியா கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கட்டுரை விக்கிபீடியாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இங்கு வால்காவிலிருந்து கங்கை வரை நூலின் (கதைச்) சுருக்கம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்நூலுக்கு விமர்சனம் எழுத வேண்டுமென்றால், 20 பகுதிகளாக எழுத வேண்டும்.
வால்காவிலிருந்து கங்கை வரை நூல் ராகுல சாங்கிருத்யாயன் அவர்களால் 1944ல் எழுதப்பட்டது. இந்நூலை 1949ல் திரு கண.முத்தையா தமிழில் மொழிபெயர்த்தார். இந்நூலின் மூலமும் தமிழ் மொழிபெயர்ப்பும் சிறையிலேயே மலர்ந்தது. இந்நூலின் மூலம் இந்தியில் ராகுல்ஜியால் எழுதப்பட்டது. வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகம், ஆங்கிலம், ரஷ்ய மற்றும் சைன மொழி உட்பட பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட எல்லா மொழிகளிலும் ஒரு சிந்தனைப் புரட்சியைத் தோற்றுவித்தது எனலாம்.
புத்தகச் சுருக்கம்:
வரலாற்றோடு புனைவை தத்துவார்த்த ரீதியில் இணைத்து, பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில், கதை மாந்தர்களின் வழியாய் தன் கருத்துகளை தர்க்கரீதியாக விளக்குகிறார் ராகுல்ஜி. கி.மு 6000ல் துவங்கும் முதல் கதை, இருபதாவது கதையாக கி.பி1942ல் முடிகிறது. இந்தோ–அய்ரோப்பிய இனக்குழு(ஆரியர்), ஒரு சமூகமாய் வளர்ச்சி அடைவதும், கால்நடையாய் அலைந்து திரிந்து வால்காவின் நதிக்கரையிலிருந்து இலக்கற்று கங்கையின் கரையில் வந்தமர்ந்து, பாரதவர்ஷத்தை அமைத்ததையும் முகலாய ஆட்சியின் காலத்தையும், ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகளையும் தத்துவார்த்த ரீதியாகவே வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தில் கதைகளாக வடித்திருக்கிறார்.
நிஷா, திவா மற்றும் அமிர்தாஸ்வான்:
இந்த முதல் மூன்று கதைகளிலும் வால்கா நதிக்கரையிலிருந்து மத்திய ஆசியா வரை படிப்படியாக வந்த இனக்குழுவின் கதைகளை காணலாம். இந்த படிநிலையில், முதல்கதையில் தாய்வழிச்சமூகமாக இருந்த குழுவின் தலைமைப் பதவிக்கான போட்டியோடு முடிகிறது , இந்தக்கதையில் சமூகம் முழுக்கவே ஒரே குடும்பமாக, சொத்துடமை இல்லாத புராதணபொதுவுடைமை சமூகமாக இருக்கிறது. இரண்டாம் கதையில் ஒரே குடும்பமாய் இருந்த சமூகம் ஒரே குழுவாக மாறுகிறது, தாய் தலைமை பதவியை வகித்தாலும், அவள் அந்தப் பஞ்சாயத்தின் தலைவியாகவே இருக்கிறாள். மூன்றாவது கதையிலேயே பெண்ணின் தலைமை பிடுங்கப்பட்டு தந்தை வழிச் சமூகமாக மாறிவிடுகிறது, பெண்ணின் உரிமைகள் பறிக்கப்பட்டு அவளும் ஒரு பண்டமாகவே கருதப்படுகிறாள், ஆனாலும் ராகுல்ஜி பெண்ணின் வீரத்தை மதுரா என்ற பாத்திரத்தில் பறைசாற்றுகிறார்.
புருகூதன், புருதானன் மற்றும் அங்கிரா:
இந்த மூன்று கதைகளில் புருகூதன் கதையில் செம்பும், வெண்கலமும் புழக்கத்திற்கு வருவதையும், கற்கால கருவிகள் காலாவதியாகி புதுயுகத்திற்குள் புகுகிறார்கள். அதேபோல தங்கமும் ஆபரணமாக உருப்பெறுகிறது. மக்களைக் காத்து போரில் வழிநடத்தி எதிரிகளை வெல்லும் தலைவன் இந்திரன் எனப்படுகிறான், இந்த இந்திரனே அடுத்த கதையில் தேவர் குலத் தலைவனான இந்திரனாக மாற்றம் பெற்று வேதங்களால் புகழப்படுகிறான். புருதானன் மற்றும் அங்கிரா கதைகளில் சிந்து சமவெளி நகர மக்களுடன் ஆரியர்களுக்கு ஏற்பட்ட போரும் அந்த நகரங்கள் அழிக்கப்பட்ட வரலாறும் கூறப்படுகிறது.
சுதாஸ், பிரவாஹன் மற்றும் பந்துலமல்லன்:
மக்கள் சமூகமாய் இருந்த இனக்குழு அரசபதவியை உருவாக்கியபோது, அரசபதவியை சுரண்டலுக்கான கருவியாகப் பயண்படுத்தி பிரிவினையை உருவாக்கும் வேலையை விஸ்வாமித்திர, வசிஷ்டர், பரத்வாஜர் போன்றவர்களை வைத்து புரோகிதர்கள் செயல்பட்டதை சுதாஸ் கதையிலும், ப்ரம்மசூத்திரம் உருவாக்கி முற்பிறவி, கரும காரியங்களை பயன்படுத்தி மீண்டும் மக்களை அடிமைப் படுத்தும் வேலையை பிரவாஹன் செய்ததையும் அதை யக்ஜவல்கியன் மேற்கொண்டு முன்னெடுத்து செலுத்தியதையும் பிரவாஹன் கதையிலும் சாட்டையடியாய் விளாசுகிறார் ராகுல்ஜி. பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம் நாத்திகவாதிகளால் பட்ட அடியையும் கௌதம புத்தரின் தத்துவ தரிசனத்தின் நிழலில் பௌத்தம் தழைத்ததும் கூறப்படுகிறது.
நாகதத்தன், பிரபா, சுபர்ணயௌதேயன் மற்றும் துர்முகன்:
இந் நான்கு கதைகளிலும் மக்களின் பஞ்சாயத்து முற்றிலும் முழுதாக ஒழிக்கப்பட்டு சர்வாதிகாரமும் கொண்ட சக்ரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்ளப்பட்ட காலகட்டம் பின்னணியாக வைக்கப்பட்டு குப்தர்களின் அரசாட்சி முறை விமர்சணத்துக்கு உள்ளாக்கப்படுகிறது, அதே சூழலில் பௌத்த தத்துவமும், பௌத்த ஜனசங்க ஆட்சிமுறையும், அஸ்வகோஷ் போன்றவர்கள் வாயிலாகவும் விளக்கப்படுகிறது. இந்திய கலை உலகத்துக்கு அஷ்வகோஷால் நாடகக் கலை, வடிவம் பெற்றதையும், காளிதாசர், பானபட்டர் போன்ற படைப்பாளிகளும் தங்கள் படைப்புத்திறனை அரச துதி பாடுவதற்கு பயண்படுத்தியதையும் ராகுல்ஜி ஒரு பாத்திரமாக மாறி சாடுகிறார்.
சக்கரபாணி, பாபா நூர்தீன் மற்றும் சுரையா:
இம்மூன்று கதைகளிலும் இந்தியாவில் இஸ்லாமியர்களின் வருகையையும், கொள்ளையையும் மற்றும் அவர்களது அரசாட்சியையும் அவர்களை ஒட்டுமொத்தமாய் எதிர்க்காத இந்திய அரசர்களையும் ராஜ புத்திரர்களின் வீரத்தையும், இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சி முறையையும் கூறுகிறார். அக்பர்–பீர்பால் பற்றிய கதைகளை அக்பரும் பீர்பாலும் தோடர்மாலும் பேசிக்கொள்வதாகவும் அவர்களுடைய பேச்சு மதங்களை தாண்டிய மணிதத்தைப் பற்றியதாகவும் அதை நோக்கிய பயணத்தைப் பற்றியும் இருக்கிறது.
ரேக்கா பகத், மங்கள சிங், சபதர் மற்றும் சுமேர்:
இந்நான்கு கதைகளிலும் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் விளைவுகள் கூறப்படுகிறது. ரேக்கா பகத் கதையில் ஜமீன்தாரி முறையின் தோற்றத்தையும், ஆங்கிலேய ஆதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட ஜமீன்தாரி முறைக்கு எதிராகவும் அதன் தோற்றத்தை அலசி ஆராய்பவர்களில் ஒருவரான, ரேக்காபகத், ஜமீன்தாரி முறையால் என்ன ஆனார் என்பதும், அவர் ஜமீன்தாரி முறைக்கு எதிராக என்ன செய்தார் என்பதும் அடங்குகிறது. மங்களசிங் கதையில், சிப்பாய் கலகம் செய்தவர்கள், கவணிக்கத் தவறிய,செய்யத் தவறிய ஆனால், செய்திருக்க வேண்டிய செயல்களை செய்யும் ஒரு வீரனான மங்கள சிங்கின் கதையைக்கூறி சிப்பாய் கலகத்தையும் அதை முன்நின்று நடத்தியவர்களையும் விமர்சிக்கிறார் ராகுல்ஜி. சபதர் மற்றும் சுமேர் ஆகிய இரன்டு கதைகளும் கி.பி 1922 முதல் இரண்டாம் உலகப்போர் காலம் வரையிலான இந்திய சுதந்திரப்போராட்ட நிகழ்வுகளின் மீதான விமர்சனங்களையும், மகாத்மா காந்தியின் போராட்டமுறைகளையும் விமர்சிக்கிறார். இரண்டாம் உலகப்போரின் காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இக்கட்டான நிலையையும், பாசிச, நாசிசத்தால் ஏற்படப்போகும் ஆபத்துக்களையும், பொதுவுடைமை மட்டுமே இவை எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும் என்பதையும், (எக்காலத்திலும்) நடுநிலை வகிப்பதாய் சொல்பவர்களையும் சாடுகிறார்.
ராகுல்ஜி அவருடைய பயணக்கட்டுரைகளுக்காக புகழ்பெற்றவர், வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தின் இருபது கதைகளிலும் அவரும் ஊர்சுற்றியாகவே அந்தந்த காலத்துக்குச் சென்று பார்த்ததைப் போலவும், கதைகளில் வரும் பாத்திரங்களின் பேச்சும் செய்கையும் இந்தப் பாத்திரங்கள் ராகுல்ஜியாகவோ அல்லது ராகுல்ஜி இந்த பாத்திரமாகவோ, வாழ்ந்திருப்பதை அறிய முடியும். இந்த நடையும், கதை சொல்லும் பாங்குமே இப்புத்தகத்தின் வெற்றி எனலாம்.
- The shawshank redemption
சுவர்களும் இருட்டும் எப்போதுமே கொடுமையானவை, தனிமை விரும்பிகளுக்குக் கூட கொடுமையானது சிறைச்சாலை சுவர்கள். அந்த சிறைச்சாலை சுவர்களுக்குள் அடைக்கப்படும் மணிதன் ஒருவனுக்கு வழங்கப்படும் அல்லது எடுக்கப்படும் மீட்பு நடவடிக்கைதான் The Shawshank Redemption. சில சினிமாக்கள் நம்மை அதன் போக்கோடு இழுத்துச் செல்லும். சில சினிமாக்கள் நம்மை துரத்தியணுப்பிவிடும்.சில முடிந்தவுடன் நம்மோடே பல நாட்கள் பயணிக்கும். சில சினிமாக்கள்,திரையில் ஒரு கதாபாத்திரம் அழுதால் நம்மை அழவைத்து, சிரித்தால் சிரிக்கவைத்து, நம்மை பாதிக்கும், இதுவும் அந்த வகை சினிமா தான்.Read More
தன் மனைவி,தன் நண்பனுடன் தொடர்பு கொண்டிருப்பாளேயானால் ஒரு கனவன் என்ன செய்வானோ அதைத்தான் நாயகனும் செய்கிறான். அதற்காக அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தான் அந்தக் கொலைகளைச் செய்யவே இல்லை தான் ஒரு அம்மாஞ்சி என்கிறான் அவன். நீ அம்மாஞ்சியோ இல்லை அப்பாவியோ அதெல்லாம் தெரியாது உனக்கு இரட்டை ஆயுள்தணடனை அவ்ளோதான்.
சிறைக்குச் செல்கிறான், நான் நல்லவன் நான் வீட்டுக்குப் போவனும், நான் வீட்டுக்குப் போவனும் என்று சப்பாணி கணக்காக அழும் ஒரு குண்டனுக்கு நேரும் கதியைப் பார்த்து மௌனமாகிறான். காலையில் எழுந்து இரவில் உறங்கி மீண்டும் காலையில் எழுந்திருக்கும் ஒரு அற்புதமான நாளில் சிறையில் இருக்கும் இன்னொரு பெரிய தலையோடு பழகுகிறான். அந்த தலை, சிறைச்சாலைச் சுவர்களுக்குள் வியாபாரம் செய்யும் ஒரு மறைமுக வியாபாரி. அவனிடம் இவன் ஒரு மிகச்சிறிய பொருளை எனக்கு வரவைத்து தர முடியுமா எனக் கேட்கிறான். அந்த பொருளை வைத்து “நீஅந்த வேலையைச் செய்யனும்னா600வருஷம் ஆகும்” என்று கூறிவிட்டு வாங்கிதருகிறான். அந்த தலை மட்டும் தான் அந்தச் சிறையில் இருக்கும் ஒரே குற்றவாளி, மற்றவர்கள் அனைவரும் அம்மாஞ்சிகள் தான்.
அந்த சிறை வார்டனுக்கு கட்டாயம் எல்லா கைதிகளும் பைபிள் படிக்க வேண்டும். அது அவர்களை பரிசுத்தமாக்கும். இன்னொரு வயது முதிர்ந்த கைதி, சிறை நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர், அந்த சிறையை விட்டுப் பிரிய மனமில்லாமல் சிறைக்குள்ளேயே ஒரு கொலை செய்யுமளவிற்கு அவர் அந்தச் சிறையோடு ஒன்றிப்போயிருக்கிறார். இன்னொரு கும்பல் இருக்கிறது, காமக் கொடூரக் கும்பல்.
நம்ம ஹீரோவுக்கு ஒரு துறையில் பழம் தின்று கொட்டை போடுமளவுக்கு அணுபவம். ஆனால் பழம் தின்று முடித்தவுடனேயே சிறையில் போட்டுவிடுகிறார்கள், கொட்டை போட முடியவில்லை. அந்த அனுபவம் அவனுக்கு சில வசதிகளை அளிக்கிறது கூடவே ஆப்பும். அவனுக்கு ஒரு விநோத பழக்கம் இருக்கிறது, சின்னச் சிறு கற்களை எடுத்து இழைத்து இழைத்து சிற்பம் செய்வது. கூடவே ஒரு சினிமா நடிகையின் மீதான காதல் அவள் புகைப்படத்தின் கண்முன்னால் விழிப்பது வரை அவனை இழுத்து விடுகிறது, மெல்ல மெல்ல காலம் ஓடுகிறது, நடிகைகளும் மாறுகிறார்கள் அவர்களின் படங்களும் மாறுகிறது, ஆனால் அதே சிறை அதே கைதிகள்,சில புதிய கைதிகள்.
அப்படி ஒரு புதிய கைதி வருகிறான். அவன் ஹீரோ குரூப்போடு சேருகிறான். அவனுக்கு படிக்கச் சொல்லி கொடுக்கிறான் ஹீரோ. (ஹீரோவுக்கு கிடைக்கும் வசதிகளில் ஒன்று நூலகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு) அந்த புதிய கைதியின் மூலமாக அவன் உண்மையிலேயே அம்மாஞ்சிதான் என நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் மரத்தடியில் ரசித்தபடி முதல் மிடறு காப்பியை குடிக்கப் போகும் போது மரத்திலிருந்து காக்கை சரியாக குறிபார்த்து காப்பியில் எச்சம் போட்டதைப் போல ஆகிவிடுகிறது. அவனுக்கு மீட்பு கிடைக்காமல் போய்விடுகிறது, அவன் எப்படி மீட்கப்படுகிறான் என்பதுதான் மீதிக்கதை.
அவன் சிறைக்கு வந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதைக் காட்ட பயண்படுத்தப்படும் நாட்காட்டி அந்த பெருந்தலைதான், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை அவர் வெளியே செல்ல வாய்ப்பு வழங்கப்பட விசாரிக்கப்பவதும். மீண்டும் அடைக்கப்படுவதுமாய் இறுதியில் அவர் பேசும் வசணங்கள் ஆர்ப்பாட்டமில்லாத களேபரங்கள், ”நானும் இந்தச் சிறையோடு ஒன்றிப்போய்விட்டேன்,” ”இந்தச் சிறையில் இருக்கும் ஒரே குற்றவாளி நான்தான்”, “………………. So, I’m here” ,மணுஷனாய்யா இவரு?இவர் கூட நடிக்க மத்தவங்க எல்லாம் எப்படிதான் ஒத்துக்குறாங்கன்னு தெரியல, மத்தவங்க எல்லாம் இவருக்கு முன்னாடி காணாம போயிடராங்க.
தன்னம்பிக்கையை ஊட்டும் தலை சிறந்த படைப்பாக இந்தப் படத்தைக் கூறலாம்.
- Children Of Heaven
சிறு வயதில் நீங்கள்,பெரியவர்களால் நுழைய முடியாத மறைவான உலகத்தில் தலைமறைவு காரியங்களைச் செய்திருக்கிறீர்களா? உங்கள் தங்கையோ,அண்ணனோ செய்த தவறை பெற்றோரிடமிருந்து மறைத்து காப்பாற்றியிருக்கிறீர்களா? Children Of Heaven படத்தைப் பார்த்தால் உங்கள் சிறு வயது நினைவுகள் கிளறப்படுவதை உங்களால் தடுக்க முடியாது.
Read More
- இது பெரியாரின் வெற்றி
தந்தை பெரியார் அவர்கள் – பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டபோது – அப்போதும் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள்,Read More
தந்தை பெரியார் அவர்கள் தமது வாழ்நாளின் இறுதியில் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று விரும்பினார்; அதற்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் பிரகடனம் வெளியிட்டிருந்தார். இன்று அவரது விருப்பம் நிறைவேற்றி வைக்கப்படாத நிலையில் நாம் அவரை அடக்கம் செய்கிறோம். பெரியாரின் நெஞ்சில் ஒரு முள் போல அந்த நிறைவேற்றப்படாத அறிவிப்போடு சேர்த்து அவரை நாம் அடக்கம் செய்கிறோம் – என்று கண்களில் நீர் பனிக்க – துக்கம் தொண்டையை அடைக்க தழுதழுத்த குரலில் கூறினார்.
2006ல் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மளமளவென்ற பெரியார் கொள்கைகள் பலவற்றை – திராவிடர் இயக்கக் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி வைப்பதில் தீவிரம் காட்டினார் கலைஞர். அதனையொட்டி – பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக – அவர் காலத்திலேயே நிறைவேற்றப்படாமல் போய்விட்ட – அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரது இறுதி ஆசையை சட்டமாக்கினார்.
சட்டமாக்கியதோடு நின்றுவிடவில்லை. அவர் திருவண்ணாமலை, பழநி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை அமைத்துத் தந்தார். இந்தப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த பெற்றோரும் தங்களது பிள்ளைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டினர்.
இன்று தமிழகத்தின் பல்வேறு கோயில் களிலும் அர்ச்சகர்களாக இருக்கும் எத்தனை பேருக்கு அர்ச்சனைக்குரிய மந்திரங்கள் முழுமையாகத் தெரியும் என்பது சந்தேகத்துக் குரியதே! எத்தனை பேர் முறையாக இதற்காக சிறந்த குருக்களிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் கேள்விக்குரியதே. ஆனால் – கலைஞர் அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில், கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், கிரந்தம், திருக்குறள், பன்னிரு திருமறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்பிக்கப்பட்டு, பயிற்சியும் அளிக்கப்படுகிறது!
ஒரு சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகமுடியும் என்ற உயர்சாதி ஆதிக்கத்தின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆனவர்கள், மன்னனுக்குப் பிறகு அவரது மகன் மன்னன் ஆவது போல – பரம்பரை பாத்தியதையின் பெயரால் – முறையான பயிற்சியோ – சமயப் பற்றோ – அது தொடர்பான விஷய ஞானமோ இல்லாமலே, ஆட்டமேடிக் அர்ச்சகர்களாக வாய்ப்புப் பெற்று தங்களுக்குத் தெரிந்த அளவில் மந்திரம் சொல்லி அர்ச்சித்து வந்தார்கள். பொதுமக்களும் – தங்களுக்குப் புரியாத சமஸ்கிருத மொழியில் அர்ச்சனை நடத்தப்படுவதால் கண்ணை மூடிக் கொண்டு – கண்மூடித்தனமாக – நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே வழிபட்டு வந்தார்கள்.
கலைஞர் அரசு – அர்ச்சகர்களுக்கு உரிய தகுதிகளோடு – திறமை மிக்க அர்ச்சகர்களை உருவாக்கித் தந்திருக்கிறது.
அதுமட்டுமா? இந்தப் பள்ளிகளில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும், ஜோதிடம், இசை, சிற்பக்கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் உள்ளனர் என்று ஆனந்தவிகடன் (25.6.2008) ஏடு பெருமையோடு குறிப்பிடும் அளவுக்கு இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பல்துறை வித்தகர்களாகவுமிருக்கிறார்கள்.
இது பெரியாரின் வெற்றி – என்ற தலைப்பிட்டு விகடன் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை வருமாறு:-
பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கிவிட்டேன் என்று முதல்வர் கருணாநிதி நெகிழ்ச்சியோடு அறிவித்த திட்டம்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம். இதையடுத்து தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய ஆறு இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப்பட்டன.
எப்படி இருக்கிறது அர்ச்சகர் பயிற்சி என்று அறிய, முதல் ஆண்டு பயிற்சியை முடித்த திருவண்ணாமலை பள்ளிக்குச் சென்றோம்.
எட்டாம் வகுப்பு பாஸ் செய்திருந்தாலே போதும், இந்தப் பள்ளியில் சேர்ந்து விடலாம். ஆனால், இந்தப் பள்ளியில் படிக்கும் பலரும் பட்டதாரிகளாகவும் ஜோதிடம், இசை, சிற்பக் கலை என ஒவ்வொரு துறையில் தேர்ந்தவராகவும் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சமூக நீதிக்கான போராட்டத்தில் கிடைத்த பல வெற்றிகளில் இது முக்கியமானது. இவ்வளவு சிறப்பான திட்டத்தின் பயனை அனுபவிக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு நிறைய மகிழ்ச்சி. இப்பயிற்சியில் நான் அடிப்படையாகக் கற்றுக் கொண்ட விஷயம் ஒழுக்கம். பூசை செய்யும் முறைகளில் ஆகம விதிகளையும் நெறி முறை களையும் கற்றுக் கொண்டேன். வாழ்க்கையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பேன் என்கிறார் விஜயசங்கர் என்கிற மாணவர்.
இப்படியொரு புரட்சிகரமான மாற்றத்தில் என்னுடைய பங்களிப்பும் சிறிய அளவிலாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனாலேயே நான் படித்துவந்த பி.காம்., படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, இந்தப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்திருக்கிறேன் என்கிறார் பிரபாகரன்.
நாங்கள் இந்தப் பயிற்சியில் கோயிலின் அமைப்பு முறைகள், வேதங்கள், ஜோதிடம், அர்ச்சனை செய்யும் முறை, ஆகமங்கள், திருக்குறள், பன்னிரு திருமுறைகள், சைவத் தமிழ் இலக்கியங்கள், தேவாரம், திருவாசகம் என பலவற்றைப் படித்துள்ளோம். தமிழ், சமஸ்கிருதம் என இரு மொழிகளிலும் பூசை செய்ய எங்களால் இயலும். என்றாலும், தமிழில் அர்ச்சனை செய்வதையே நான் சிறப்பாகக் கருதுகிறேன் என்கிறார் தர்மேந்திரன்.
இம்மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியங்களைப் புலவர் மு.சொக்கப்பனும், சைவ ஆகமங்களை எஸ்.எஸ்.ராமகிருஷ்ண னும் போதிக்கின்றனர்!
– என்கிறார் விகடன் கட்டுரையாளர்சுப.தமிழினியன்!அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆனால் – கோயிலின் புனிதம் கெடும் – சாமிக்குப் புரியாது – ஆகமங்களுக்கு அது விரோதமானது என்று இதுவரை கூப்பாடு போட்டு வந்த குறுக்குச்சால் ஓட்டிகள் இனியாவது தங்களது பழைய – துருப்பிடித்த – மூடநம்பிக்கைகளை கைவிட்டு – பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல – என் பதை ஒப்புக் கொண்டு – இந்தப் புதுமையை புரட்சியை வரவேற்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புவோமாக!</p>(முரசொலி மற்றூம் விடுதலை இதழில் என்னுடைய கட்டுரையை முழுதுமாக மேற்கோள் காட்டி சின்னக்குத்தூசி எழுதிய கட்டுரை இது.)</div>